தமிழை மட்டும் நம்பி ப்ரெஜனம் இல்லை.. ரூட்டை மாற்றிய சங்கர்..! என்ன செய்து வருகிறார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் சங்கர். தமிழ் சினிமாவை இந்திய அளவில் எடுத்து சென்றவர்களில் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சங்கர் இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. சமூக அக்கறை கொண்ட தேச நலன் சார்ந்து படம் எடுக்க கூடியவர் இயக்குனர் சங்கர். இவர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படம் இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டது. மிக பெரிய வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து பிரமாண்ட இயக்குனர் என வலம் வந்த சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.0 படம் படுதோல்விக்கு பின்பு இதுவரை அவருடைய இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. மேலும் இயக்குனர் ராஜமௌலி, மற்றும் KFG படத்தின் இயக்குனர்கள் போன்றவர்களின் பிரமாண்ட படைப்புகளில் வெற்றிக்கு பின்பு பிரமாண்ட இயக்குனர் என்கிற பட்டத்தை இழந்தார் சங்கர் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தமிழ் சினிமாவை மட்டும் நம்பி இருந்தால் இனி பிரோஜனம் இல்லை என முடிவு செய்த சங்கர், இயக்குனர் ராஜமௌலி பார்முலாவை கையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ரஜினி, கமல் போன்ற வயதான நடிகர்களை வைத்து சிரமப்படாமல், மேலும் விஜய், அஜித் போன்ற நடிகர்களை வைத்து அவர்களுக்கு ஏற்றது போன்று காட்சிகள் அமைக்காமல், ராஜமௌலி போன்று உடல் கட்டமைப்பு உள்ள நடிகரை தேர்தெடுத்து தான் நினைத்ததை படமாக்கலாம் என்று திட்டமிட்ட சங்கர்.

மேலும் தமிழ் சினிமா நடிகர்கள் நடித்தால் அந்த படம் தமிழ் ரசிங்கர்களை தாண்டி செல்லாது, அதனால் பிறமொழியில் பேன் இந்தியா ஸ்டார் நடித்தால் தனது படைப்பு அணைத்து மொழிகளில் ஹிட் அடிக்கும் என தனது ரூட்டை மாற்றியுள்ளார் இயக்குனர் சங்கர். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை பாதியிலே விட்டுவிட்டு, தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படத்தை மிக தீவிரமாக இயக்கி வருகிறார் சங்கர்.

இந்த படம் குறித்து சில சுவாரசியமான தகவல் ஓன்று வெளியாகியுள்ளது, அதில் கடந்த ஆண்டு பஞ்சாப் சென்ற பிரதமர் வாகனம் வழிமறிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பின்பு எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி, இந்த கசம்பவம் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் இடம் பெற இருப்பதாகவும், அதற்க்கான படப்பிடிப்பு பஞ்சாபில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பேன் இந்தியா படங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்டவர்கள் கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்று வருகிறது, அதே போன்று இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் அது போன்ற காட்சிகள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது படத்தை இந்தியா முழுவதும் உள்ள அணைத்து மொழி பேசும் மக்களும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு கட்சியையும் ரசிக்கும்படி எடுத்து வருகிறார் சங்கர் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

நன்றி மறந்த ரஜினிகாந்த்… நடுதெருவில் நிற்கும் கே.எஸ்.ரவிக்குமார்..! அஜித்தை பார்த்து கற்று கொள்வாரா ரஜினி.?