தேடி வந்த சங்கர்… தேவையில்லை என தூக்கி எறிந்த அஜித்… இடையில் புகுந்து பிரசாந்த் செய்த சம்பவம்…

0
Follow on Google News

நடிகர் அர்ஜுனை வைத்து தனது சினிமா இயக்கத்தை தொடங்கிய சங்கர், ரஜினி, கமல், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர், இதுவரை அஜித் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை, ஆனால் சங்கர் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பாதியிலே அந்த படத்தில் இருந்து அஜித் வெளியாகிய தகவல் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஜீன்ஸ் படம் தொடங்குவதற்கு முன்பு நடிகர் பிரசாந்தை ஜீன்ஸ் படத்தில் நடிக்க வைக்க, நடிக்க வேண்டும்ஷங்கருக்கு நெருங்கிய நண்பர் வெங்கடேஷ் மூலம் தூது விட்டுள்ளார் பிரசாந்த் தந்தை தியாகராஜன். ஆனால் ஜீன்ஸ் படம் நான் அஜித்தை மனதில் வைத்து தான் எழுதினேன், அதனால் நடிகரை மாற்ற முடியாது என சங்கர் பிடிவாதம் பிடித்துள்ளார். மேலும் ஏற்கனவே பிரபு தேவா நடித்த காதலன் படத்தில் பிரசாந்த் நடிப்பதாக இருந்தது.

ஆனால், தியாகராஜன் காதலன் படத்தில் பிரசாந்த் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை, இந்த கோபம் வேறு சங்கருக்கு இருந்தது. இருந்தாலும் சங்கருக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறேன், ஜீன்ஸ் படத்தை நானே தயாரிக்கிறேன், அந்த படத்தில் பிரசாந்த் நடிக்கட்டும் என்றெல்லாம் தியாகராஜன் இயக்குனர் சங்கருக்கு தூது விட்டுள்ளார்.ஆனால் ஷங்கர் ஜீன்ஸ் பட கதை எழுதும் போது அஜித்தை மனதில் வைத்து தான் எழுதினேன்.

அதனால் வேறொரு கதை ரெடியாகும் போது பிரசாந்தை நடிக்க வைக்கிறேன் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து அஜித்தை சந்தித்து ஜீன்ஸ் படத்தின் கதையை தெரிவித்தார் சங்கர். அப்போது இந்தியன் என்கிற மிக பெரிய ஹிட் கொடுத்த சங்கர் இயக்கத்தில் பல நடிகர்கள் போட்டி போட்டு கொண்டிருந்த காலகட்டத்தில், அஜித் மிக பெரிய உச்சத்தில் இல்லை என்றாலும் கூட சங்கர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கமிட்டானார் அஜித்.

ஜீன்ஸ் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி, அதில் சுமார் மூன்று நாட்கள் அஜித் பங்கேற்றுள்ளார். ஆனால் படத்தின் ஆரம்ப கட்டத்திலே, இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் அஜித் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்ததாகவும், இதன் பின்பு, இனி சங்கர் படத்தில் நடிப்பதில் அர்த்தம் இல்லை என்கிற முடிவு வந்துள்ளார் அஜித்.

இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் ஜீன்ஸ் ஆரம்ப கட்ட வேலைகளில் கலந்து கொண்ட அஜித், அந்த படத்தில் இருந்து பாதியிலே நடிகர் அஜித் வெளியேறியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அந்த கால கட்டத்தில் நடிகர் அஜித் அந்த அளவுக்கு உச்சத்தில் இல்லை என்றாலும் கூட தனது தன்மானத்துக்கு ஒரு அவமரியாதை ஏற்படுத்துகிறது என்றால் அதில் எந்த ஒரு சமரசமும் கிடையாது என அப்போதே நடிகர் அஜித் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜீன்ஸ் படத்தில் இருந்து பாதியிலே அஜித் வெளியேற, சங்கர் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என காத்திருந்த பிரஷாந்த்க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது, ஜீன்ஸ் படம் மிக பெரிய ஹிட் அடித்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து, கண்ணெதிரே தோன்றினால், தமிழ், ஜோடி, அப்பு, என பல ஹிட் படங்கள் கொடுத்து டாப் ஹீரோவாக இருந்த பிரசாந்த் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனவர் தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.