மிக பெரிய பட்ஜெடில் ரஜினிகாந்த் உடன் இணையும் ராஜமௌலி ….. என்ன கதை தெரியுமா.?

0
Follow on Google News

இந்திய சினிமாவில் மிக பிரமாண்ட இயக்குனர் என வலம் வந்த தமிழ் சினிமா துறையை சேர்ந்த இயக்குனர் சங்கரை ஓரம் கட்டிவிட்டு, தற்பொழுது இந்தியாவில் நம்பர் ஒன் இயக்குனராக மிக பெரிய உச்சத்தில் இருக்கிறார் தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குனர் SS ராஜமௌலி. பெரும்பாலும் சங்கர் படங்களில் பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் மட்டும் அதிக செலவில் எடுக்கப்படும், ஆனால் ராஜாமௌலி படம் முழுவதுமே பிரமாண்டம் என்பதர்க்கு மகாவீர், பாகுபலி, RRR போன்ற படங்கள் நிரூபித்துள்ளது.

ராஜமௌலி படங்கள் பெரும்பாலும் வரலாற்று சம்பவங்களை மையமாக கொண்டு, அதற்கு ஏற்றார் போல் கதை, திரைக்கதை அமைத்து எடுக்கப்படும். இந்தியாவில் இந்தி சினிமாவுக்கு அடுத்து தமிழ் சினிமா தான் என்கிற நிலை இருந்து வந்தது, அப்போது தமிழ் படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. இதனால் தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகளுக்கு மற்ற மொழி படங்களை விட தமிழில் அதிக சம்பளம் கிடைத்து வந்தது.

இந்த ஒரு கட்டமைப்பை உடைத்தவர் ராஜமௌலி, இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்திற்கு பின்பு இந்தி சினிமாவுக்கு பின் தெலுங்கு சினிமா தான் என்கிற நிலை உருவாகி, மேலும் தமிழ் திரைப்பட துறையினர் தெலுங்கில் தங்களது மார்க்கெட்டை நிலைநிறுத்த கடும் போட்டி போட்டு கொண்டிருக்கிறனர். அந்த வகையில் தற்பொழுது தமிழில் வெளியாகும் பல படங்கள் தெலுங்கு பட சாயல் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவை தலை நிமிர செய்த ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் RRR மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜமௌலி அடுத்த படம் என்ன என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்றைய சூழலில் ஒரு உச்சக்கட்ட நடிகருக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவு இயக்குனர் ராஜமௌலிக்கு அதிக ரசிகர்கள் உண்டு.

சமீபத்தில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ராஜமௌலி புதிய படத்துக்கான கதையை சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாபாரதத்தை மையமாக கொண்ட கதை என்றும், அதில் துரோணாச்சாரியார் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் மஹாபாரதத்தில் துரோணாச்சாரியார் கதாபாத்திரம் என்பது அவருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

மேலும் ராஜமௌலி கதை சொன்னதை கேட்டு ரஜினிகாந்த் அந்த கதையில் இருந்து இயல்பு நிலைக்கு வருவதற்கே சில நிமிடங்கள் ஆனது என்று கூறப்படுகிறது. கதை மிகவும் பிடித்து விட்டது ஆனால் தற்பொழுது சன் பீச்சர் தயாரிப்பில் புதிய படம் ஓன்று நடித்து கொண்டிருப்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு தான் என்னுடைய உடன் நிலையை பொருத்து அடுத்த படம் குறித்து உறுதியான முடிவு எடுக்க முடியும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ராஜமௌலி மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் கதை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்துக்கான அடுத்தகட்ட நகர்வுகள் ரஜினிகாந்த் முடிவுக்கு பின்பு தான் அதற்கான பணிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் முடியாத பட்சத்தில் வேறு ஒரு நடிகரை வைத்து இந்த படத்தை ராஜமௌலி இயக்குவதர்க்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

ரஜினி மகள்கள் இடையே குடுமிப்பிடி சண்டை…  தலையை பிய்த்து கொண்ட ரஜினி..! இறுதியில் நடந்தது என்ன.?