நன்றி மறந்து நண்பன் முதுகில் குத்திய நெல்சன்…பாவம் சிவகார்த்திகேயன்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த இருந்த போது, அதே தொலைகாட்சியில் உதவி கதையாசிரியராக பணியாற்றியவர் நெல்சன், சிவகார்த்திகேயன் போன்றே நகைச்சுவை உணர்வு கொண்டவர் நெல்சன், இருவரும் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். நெல்சன் – சிவகார்த்திகேயன் இருவரும் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் 2012ம் ஆண்டு சினிமாவில் நடிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே நடிகர் சிம்புவை வைத்து வேட்டைமன்னன் என்கிற படத்தை இயக்குனராக படம் இயக்க தொடங்கினர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலே நின்றது. இந்த பின்பு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நெல்சன், தொடர்ந்து நண்பர் சிவகார்த்திகேயன் மூலம் இசை அமைப்பாளர் அனிரூத் உடன் நெருக்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இதன் பின்பு அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரின் சிபாரிசில் நடிகை நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். கோலமாவு கோகிலா படத்துக்கு பின்பு நண்பன் நெல்சன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிக்கப் செய்து பிஸியாகிவிடுவார் என எதிர்பார்ப்பில் இருந்தார் சிவகார்திகேயன், இந்த படம் பரவாயில்லை நல்ல படம் தான் என பாசிட்டிவ் விமர்சனம் வந்தாலும் அடுத்தடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க யாரும் முன்வரவில்லை, மேலும் தயாரிப்பார்களும் நெல்சன் இயக்கத்தில் படம் தயாரிக்க தயாராக இல்லை.

இந்நிலையில் தனது சொந்த தயாரிப்பில் நெல்சன் இரண்டாவது படம் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்தார் சிவகார்திகேயன், அப்படி நெல்சன் இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் டாக்டர். கொரோனா தொற்றின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட காலத்தில் சூர்யா போன்ற நடிகர்கள் OTT யில் படத்தை வெளியிட்டு பணம் சம்பாரித்து கொண்டிருந்த காலத்தில், இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவேன் உறுதியாக இருந்து திரையரங்கில் வெளியிட்டு வெற்றியும் பெற்றார் சிவகார்த்திகேயன்.

டாக்டர் படத்துக்கு பின்பு தான் வெளி உலகத்துக்கு தெரிந்தார் நெல்சன், இதன் பின்பு நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன், அதனை தொடர்ந்து தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் நண்பன் சிவகார்த்திகேயன் தயவில் இன்று உச்ச நடிகர்களை வைத்து படம் இயக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள நெல்சன், அந்த நண்பனுக்கு துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் ஓன்று வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த எட்டு வருடங்களாக இருவரும் அவர்களின் நட்பை துண்டித்து கொண்டனர். அதே போன்று அனிருத்தும் தனுஷ் உடன் சண்டையிட்டு பிரிந்த பின்பு சிவகார்த்திகேயனுடன் இணைந்து சுற்றி வருகிறார், இதே குரூப்பில் தான் நெல்சன் இதுவரை இருந்து வந்துள்ளார், ஆனால் நண்பன் சிவகார்த்திகேயனுக்கு தெரியாமலே சமீபத்தில் நடிகர் தனுஷை சந்தித்துள்ளார் நெல்சன்.

தனுஷை சந்தித்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முடித்துவிட்டு அடுத்த புதிய படத்துக்கான கதையை தனுஷிடம் தெரிவித்துள்ளார், படத்தின் கதையும் தனுசுக்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் புத்திய படம் முடிந்த பின்பு நடிகர் தனுஷ் நடிப்பில் புதிய படத்தை நெல்சன் இயக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. தனுஷை சந்தித்து நெல்சன் கதை சொன்ன தகவல் சிவகார்த்திகேயனுக்கு சென்றுள்ளது.

இவ்வளவு நெருங்கி பழகிய நண்பன் நெல்சன் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தனுஷை சந்திக்க சென்றிருக்கலாம், மேலும் நமக்கும் தனுஷ்க்கும் பிரச்சனை என்பதை நன்கு அறிந்த ஒரு நன்பன் இப்படி செய்துவிட்டாரே என வேதனையில் சிவகார்த்திகேயன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை வளர்த்துவிட்ட நண்பன் சிவகார்த்திகேயன் முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டார் நெல்சன் என சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் அறிந்தவர்கள் பேசி வருவதும் குறிப்பிடதக்கது.

ஆசை காட்டி மோசம் செய்த வெற்றிமாறன்… பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் சூரி..! என்ன நடந்தது தெரியுமா.?