அஜித்தை சந்திப்பதற்கு முன்பு விஜய்யை ரகசியமாக சந்தித்த மகிழ் திருமேனி… விஜய் சொன்ன பதில்..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வசூலை வாரி குவித்த படம் துணிவு. தன்னுடைய அடுத்த படம் துணிவு படத்தை விட மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என்பதால், நடிகர் அஜித் தன்னுடைய கதை மற்றும் கதாபாத்திரத்தில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இதற்கு முன்பு அஜித் நடிக்கும் தன்னுடைய படங்களில் கதை மற்றும் கதாபாத்திரங்களில் பெரிதாக அக்கறை கொள்ள மாட்டார்.

கடினமில்லாத எளிமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து கஷ்டப்படாமல் நடித்து வருவதை விரும்பிய அஜித்குமார். அவருடைய நடிப்பில் வெளியான வலிமை படு தோல்விக்கு பின்பு தன்னை நேசிக்கும் ரசிகர்களை இனியும் ஏமாற்றக்கூடாது என்பதற்காக, அஜித் அவர் நடிக்கும் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

அதன் அடிப்படையிலேயே துணிவு படத்தில் அவர் தனக்கான கெட்டப், உடல் அமைப்பு மற்றும் நடிப்பு என அனைத்திலும் முக்கியத்துவம் கொடுத்து நடித்ததால் அந்தப் படம் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அந்த வகையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களும் இவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்பிய அஜித் ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகி இருந்த அஜித்குமார்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து முழு கதையை கேட்ட அஜித்குமார் டென்ஷனில் இது போன்ற மொக்க கதையில் நடித்தால் என்னுடைய ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சும் என, சற்றும் யோசிக்காமல் உடனே வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் மிக தீவிரமாக இறங்கினார். இதில் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு கதை சொல்ல அஜித்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.

ஆனால் அஜித்திடம் கதை சொல்வதற்கு முன்பு விஜய்யை சந்தித்த இயக்குனர் மகிழ் திருமேனி, தனக்கு அஜித்திடம் இருந்து கதை சொல்ல அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே உங்களிடம் ஒரு கதை சொல்லி, அந்த கதை உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்று தெரிவித்திருந்திர்கள், ஆனால் கால் சீட் கொடுப்பது பற்றி நீங்கள் இது வரை உறுதியான தகவல் ஏதும் தெரிவிக்க வில்லை, அதனால் உங்களிடம் சொன்ன கதையை அஜித் சாரிடம் சொல்ல போகிறேன் என விஜய்யிடம் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

இதற்கு விஜய் இதில் என்ன இருக்கிறது, கதை உங்களுடையது, உங்களுக்கு சொந்தமான கதையில் நீங்க யாரை வேண்டுமானாலும் நடிக்க வைக்கலாம், என்னிடம் கதை சொன்னீர்கள், ஆனால் என்னால் கால் சீட் கொடுக்க முடியவில்லை, இந்த கதையை அஜித்திடம் சொல்லுங்க நிச்சயம் அவருக்கு இந்த கதை பிடிக்கும் என மகிழ் திருமேனிக்கு தன்னிடம் சொன்ன அதே கதையை அஜித்திடம் சொல்வதற்கு பச்சை கொடி காட்டிய விஜய் புதிய படம் வெற்றி அடைய வாழ்த்துக்களையும் சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஏற்கனவே விஜய்யிடம் சொன்ன அதே கதையை அஜித்திடம் தெரிவித்துள்ளார் மகிழ் திருமேனி, கதையை கேட்ட அஜித் உடனே ரெம்ப இம்ப்ரெஸ் ஆகி, வாவ் … சூப்பர் உடனே முழு ஸ்கிரிப்ட் எழுதும் பணியை தொடங்குகள் என தெரிவித்துள்ளார் அஜித் குமார். தற்பொழுதும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தன்னுடைய உதவியாளர்கள் உடன் முழு சக்ட்ரிப்ட் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மகிழ் திருமேனி என்பது குறிப்பிடத்தக்கது.