லோகேஷ் பேராசைக்கு விழுந்த ஆப்பு….முடிவை அறிவித்த வெற்றிமாறன்….

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றி மாறன். இவர் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் மற்றும் விடுதலை போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஒரு சிறந்த இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வெற்றிமாறனை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சில இயக்குனர்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் அமீர் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’. இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர், ‘வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை’ என்று தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், இயக்குனர் அமீர் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, ‘வட சென்னை’ ராஜன் கதாபாத்திரம் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது.

கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் குறித்து நான் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் அதைப் பற்றி சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேனோ என்று நினைத்தார். ஆனாலும் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது” என்று அமீர் உடனான நட்பு குறித்து மேடையில் பகிர்ந்தார்.

மேலும், அமீர் கூறியதற்கு, “நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால்தான் சமாளிக்க முடியும். அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை” என்று வெற்றிமாறன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இயக்குனர் அமீர் கூறியது போலவே, இயக்குனர் லோகேஷ் அவர்களும் ‘லியோ’ படத்தின் வெற்றிவிழாவில் வில்லன் கதாபாத்திரத்தில் வெற்றிமாறனை நடிக்க வைக்க பலமுறை முயற்சி செய்தும் நடக்கவில்லை என்று கூறியிருந்தார். இப்படி இயக்குனர்கள் பலரும் வெற்றிமாறனை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது வியப்பிற்குரியது.