சூர்யாவை மன்னித்து ஏற்று கொண்டார் ஹரி… ஹரியிடம் சரண்டரான சூர்யா.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

விறு விருப்பான கதையம்சம், குடும்பங்கள் கொண்டாடும் வகையில் செண்டிமெண்ட் கலந்த காட்சிகள் என குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் தொடங்கி சமீபத்தில் வெளியான யானை படம் வரை, எந்த ஒரு படத்திலும் இரட்டை வசனம் இருக்காது, கவர்ச்சிக்கு ஒரு எல்லை இருக்கும், குறிப்பாக ஃபாமிலி ஆடியன்ஸை மனதில் வைத்தே ஒவ்வொரு படமும் இயக்கி வருகின்றவர் இயக்குனர் ஹரி.

ஹரி இயக்கத்தில் வெளியான முதல் படம் தமிழ் தொடங்கி சிங்கம் 2 வரை தொடர் வெற்றியை கொடுத்து வந்த ஹரி சினிமா வரிசையில் பூஜை, சிங்கம் 3, சாமி 2 என இவர் இயக்கிய கடைசி மூன்று படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, இத்துடன் ஹரி சினிமா வாழ்கை முடிந்து விட்டது என சிலர் கொக்கரிக்க. மீண்டும் யார் என்பதை நிரூபிக்க அடுத்த படத்துக்கான வேலையில் விறுவிறுப்பாக இறங்கிய ஹரி அந்த படத்திக்கான கதையை தயார் செய்தார்.

படத்தின் கதையை சூர்யாவிடம் தெரிவித்து ஓகே செய்து படத்திற்கு அருவா என பெயரிட்டு படத்திற்கான அடுத்தகட்ட வேலையை தொடங்கினார் ஹரி, ஆனால் தொடர் தோல்வியை சந்தித்து வரும் இயக்குனர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வந்த சூர்யா, நேரடியாக ஹரி படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று தெரிவிக்காமல். கதையில் சில மாற்றம் வேண்டும் என இதுபோன்று எதாவது ஒரு குறையை தொடர்ந்து தெரிவித்து அருவா படத்தில் நடிப்பதை தட்டி கழித்து வந்தார் சூர்யா.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஹரி மற்றும் சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்து மோதலாக வெடிக்க, உடனே அருவா படத்தின் தலைப்பை யானை என மாற்றி, தனது மைத்துனர் அருண் விஜயை வைத்து படப்பிடிப்பை தொடங்கினர் ஹரி, இந்த படம் இயக்குனர் ஹரிக்கு சினிமாவில் வாழ்வா.? சாவா.? என இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் திரைக்கு வந்துள்ள யானை படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

யானை படத்தின் வெற்றியை இயக்குனர் ஹரி உட்பட பட குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் ஹரியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா என கூறப்படுகிறது. மேலும் கடந்த 2013ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 2 படம் தான் சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற கடைசிபடம், அதன் பின்பு திரையரங்கில் வெளியான சூர்யா படம் ஏதும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் யானை படத்திற்கு ஹரியிடம் தொடர்பு கொண்டு வாழ்ந்து சொன்ன நடிகர் சூர்யா, சார் மீண்டும் நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் சார் என கேட்க, ஹரியும் பண்ணலாம் சார் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஹரி படத்தில் நடிக்க மறுத்த சூர்யா மீண்டும் ஹரியிடம் சரண்டராகி வாய்ப்பு கேட்டுள்ளது வழ்க்கை ஒரு வட்டம் என்பதை தெளிவு படுத்தியுள்ளது, மேலும் சூர்யாவை மன்னித்து மீண்டும் ஒரு படம் இணைந்து பண்ணலாம் என ஓகே சொன்ன ஹரி பாராட்ட கூடியவர் என சினிமா வட்டாரதத்தில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தன்னை காப்பாற்ற பின்வாசல் வழியே நுழையும் ரஜினிகாந்த்… தஞ்சை பெரிய கோவிலில் என்ன இருக்கு தெரியுமா.?