பல கோடி பணம்.. என்ன செய்வதென்று தெரியாமல் லோகேஷ் கனகராஜ் அந்த பணத்தை என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

கோவையில் எம்பிஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்த லோகேஷ் கனகராஜ் சினிமாவில் படம் இயக்க வேண்டும் என்கின்ற ஆர்வமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடுவராக பங்கேற்ற ஷார்ட் பிலிம் காம்பெடிஷன் நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார், அப்போது அவருடைய ஷார்ட் பிலிம் அங்கே போட்டியிலே நடுவராக இருந்த கார்த்திக் சுப்புராஜ் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் அவியல் என்கின்ற படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் செய்து வைத்தார் கார்த்திக் சுப்புராஜ். அதன் பின்பு கைதி திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமான அறியப்பட்ட லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து மாஸ்டர், விக்ரம் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பில் காஷ்மீரில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது, அடுத்து நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்காக சம்பளம் சுமார் 30 கோடி ரூபாய் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதே போன்று ஹிந்தியில் இயக்குனர் நடிகர் சல்மான்கானிடமிருந்து லோகேஷ் கனகராஜ்க்கு அழைப்பு வந்ததாகவும் அவர் தன் தன்னை வைத்து லோகேஷ் இயக்கும் படத்திற்கு 50 கோடி சம்பளம் தருவதாக சல்மான்கான் ஆஃபர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அதிக சம்பளம் வாங்குவதில் முன்னிலையில் இருக்கின்றார் லோகேஷ் கனகராஜ்.

மிகக் குறுகிய காலத்தில் பல கோடிகளை குவித்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் சென்னை கேகே நகரில் உள்ள ஒரு மிகப்பெரிய அப்பார்ட்மெண்டில் இரண்டாவது தளம் மொத்தத்தையும் வாங்கியுள்ளதாகவும். அந்த தளம் முழுவதும் லோகேஷ் கனகராஜ் அலுவலகமாக செயல்பட இருப்பதாகவும், மேலும் அதே அப்பார்ட்மெண்டில் மேல் தளம் முழுவதும் வாங்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அங்கே இண்டர்வியர்கள் வேலைகள் நடந்து வருகிறது.

அனைத்து வேலைகளையும் முடிந்ததும் மேல் தளத்தில் குடும்பத்துடன் குடி இருக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் அதே அப்பார்ட்மெண்டில் இரண்டாவது தளத்தில் தன்னுடைய அலுவலகம் செயல்படவும் திட்டமிட்டுள்ளார் ஆனால் அடுத்தடுத்து பல கோடிகள் வந்து குவிந்து கொண்டிருப்பதால் லோகேஷ் கனகராஜ் மிக விரைவில் அந்த முழு அப்பார்ட்மெண்டையும் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.