மரியாதை இழந்து தவிக்கு பாலா… சூர்யா இப்படி செய்யலாமா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர் இருவரும் ஒருமனதாக சட்டப்படி குடும்ப நல நிதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர், பாலா மற்றும் அவரது மனைவி இருவரும் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் முழு கவனத்தையும் இயக்குனர் பாலா செலுத்த முடியாததால் அவர் படைப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தற்பொழுது குடும்ப பிரச்சனையை முடித்து விவாகரத்து பெற்று மனைவியிடம் இருந்து பிரிந்துள்ள இயக்குனர் பாலா மனதளவில் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளார். புத்துணர்ச்சி பெற்றது போன்று தனது முழு கவனத்தை சினிமாவில் செலுத்த தொடங்கிய பாலா இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்கும் வேலையில் மிக தீவிரமாக இறங்கியவர் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் பாலா.

இயக்குனர் பாலா இல்லை என்றால் நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா இருவருக்கும் சினிமா வாழ்க்கையே இல்லை என்று சொல்லலாம், இதை சம்பந்தப்பட்ட அந்த நடிகர்களே பல முறை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக குடும்ப பிரச்சனையின் காரணமாக கடும் மனஉளைச்சலில் இருந்து மீண்டு வந்து புதிய படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து சேது, நந்தா படங்களில் எந்த மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலையில் தற்பொழுது படத்தை இயக்கி வருகிறார் பாலா.

இந்த படத்தில் சூர்யா உடன் இணைத்து ஜோதிகா நடிக்கிறார், மேலும் இந்த படத்தை 2D இன்டர்நேஷனல் சார்பில் சூர்யா – ஜோதிகா ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பாலாவுக்கு பல கண்டிஷன் போட்டுள்ளார் சூர்யா என கூறப்படுகிறது. படத்தில் காட்சிகள் கொடூரமாக இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்றும்,நீண்ட வருடங்களுக்கு பின் மனைவியுடன் நடிப்பதால் சில காட்சிகள் மாற்றம் செய்யவும் கண்டிஷன் போட்டுள்ளார் சூர்யா என்று கூறப்படுகிறது.

இதுவரை பாலா இயக்கிய படங்களில் கதை என்ன என்பது கூட ஓரளவு தெரியுமே தவிற முழுமையாக படத்தில் நடிக்கும் நடிகை நடிகர்களுக்கு தெரியாது, பாலா என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நடித்து கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள், ஆனால் தற்பொழுது பாலா இயக்கத்தில் கடைசியாக வந்த படங்கள் தோல்வியை தழுவியதால் தற்போது பாலா இயக்கும் படத்தின் கதை, காட்சிகள் என அனைத்திலும் சூர்யா தலையிடுவது பாலாவுக்கு கடும் அப்செட்டாகி உள்ளார் என கூறப்படுகிறது.

இதை அறிந்த சினிமா துறையினர், வெற்றி பட இயக்குனர்கள் சில தோல்விப்படங்கள் கொடுத்துவிட்டால் அவர்களுக்கு மரியாதை இருக்காது என்பது மரியாதை இழந்து தவித்து வரும் பாலாவை பார்த்தால் புரியும் என்றும், என்ன தான் இருந்தாலும் மிக பெரிய படைப்பாளி பாலா கதை மற்றும் காட்சிகள் அமைக்கும் விவகாரத்தில் சூர்யா மூக்கை நுழைப்பது பாலாவை அவமரியாதை செய்வது போன்று உள்ளது என்றும் இந்த படம் வெளியானால் தான் இது பாலா படமா.? இல்லை சூர்யா படமா.? என்பது தெரிய வரும் என சினிமா துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாஜக பக்கம் சாயும் விஜய்….தப்பிக்க வேறு வழியில்லை..! விஜய் மாற்றத்தின் பின்னணியில் நடந்து என்ன.?