குழந்தை ஆர்ட்டிஸ்ட்யிடம் பாலா செய்த செயல்… அதிர்ந்து போன அருகில் இருந்தவர்கள்..!

0
Follow on Google News

இயக்குனர் பாலா சைக்கோ இயக்குனர் என்கிற விமர்சனமும் உண்டு. பாலாவின் நடவடிக்கைகளை அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூட புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் பாலா அடையாளப்படுத்திய நடிகர்களில் சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் போன்ற பல நடிகர்கள் மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க தயங்குகி வருகிறார்கள்.

நான் கடவுள் படத்தில் ஆர்யா நடித்த பின்பு பாலா உடன் நெருக்கமாக பழக தொடங்கினார், பெரும்பாலும் பாலாவின் அலுவலகத்திலேயே அதிக நேரம் செலவிட்டு வந்திருந்தார் ஆர்யா. இதை தெரிந்து கொண்ட நடிகர் விஷால், எப்படியாவது பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என நண்பர் ஆர்யாவிடம் சிபாரிசு செய்ய வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பாலாவிடம் நண்பர் விஷாலுக்கு வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்துள்ளார் ஆர்யா. உடனே தன்னை அலுவலகத்தில் வந்து பார்க்கச் சொல்லியுள்ளார் பாலா. மறுநாள் டிப் டாப்பாக உடை அணிந்து, கூலிங் கிளாஸ் அருகில் ஒரு உதவியாளர் உடன் பாலா அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார் நடிகர் விஷால். தன் முன்னே கெத்தாக வந்த விஷாலை பார்த்து கடுப்பான பாலா, நீ படப்பிடிப்புக்கு வா வெச்சுக்குறேன் என்று நினைத்துள்ளார்.

அவன் இவன் படப்பிடிப்பின் நடிகர் விஷாலை அழைத்து முதல் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தாமல் ஒரு குப்பை மேட்டிலே படுக்க வைப்பது, அமர செய்வது அங்கேயே சாப்பிடவும் செய்யச் செய்துள்ளார் பாலா. இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டு அவன் இவன் படத்தில் மாலை கண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தார் விஷால். ஆனால் அந்த படத்தின் நடித்த பின்பு அவருக்கு அந்தக் கண் இதுவரை சரியாகவில்லை.

இப்படி பல நேரங்களில் சைக்கோ போன்று செயல்பட்டு வந்த பாலாவின் பலரும் அறிந்திடாத மற்றொரு முகம் பற்றிய ஒரு தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. பரதேசி படத்தில் நடித்த தன்ஷிகாவுக்கு குழந்தையாக ஒரு குழந்தை ஆர்ட்டிஸ்ட் நடித்திருக்கும், ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து அந்த குழந்தையை அவருடைய தாயார் அழைத்து சென்றுள்ளார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்திருந்த நடிகர் பாலா உடனே அந்த குழந்தையின் தாயை அழைத்துள்ளார்.

அந்த தாயிடம் குழந்தையை பற்றி விசாரித்தவர், தன்னுடைய இரண்டு பாக்கெட்டிலும் இரண்டு கட்டு பணத்தை எடுத்து, மேலும் தன் அருகில் இருந்த ஒரு பையில் இருந்து பணத்தையும் எடுத்தவர். அது எவ்வளவு பணம் என்று கூட எண்ணிப் பார்க்காமல், அந்த குழந்தையின் தாயிடம் மொத்த பணத்தையும் கொடுத்து. இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள், நல்லா சாப்பிடச் சொல் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார் பாலா.

இதை பார்த்த பாலாவின் அருகில் இருந்தவர்கள் திடீரென அதிர்ந்து போய் உள்ளனர். சைக்கோ போன்று நடந்து கொள்ளும் பாலாவின் குணம் இவ்வளவு மென்மையானதா என்று பலருக்கு அப்போது அதிர்ச்சி ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது போன்று பாலாவின் உண்மை குணம் என்ன என்பது பற்றி பலரும் புரிந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.