விஜய்க்கு கூஜா தூங்குவதாக நினைத்து சிக்கலில் மாட்டிவிடும் அட்லீ… ஏற்கனவே இருக்கிற பிரச்ச்னை போதாதா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இந்த நிலையில் சினிமா உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற விவாதம் கடந்த சில காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவர் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் அடித்தளம் போட்டது சரத்குமார் தான். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று நான் சூர்யவம்சம் படத்தின் 175 நாள் விழாவில் கூறினேன். தற்போது அது நடந்திருக்கிறது. விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்திருந்தார்.

அவரது பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அதனைத் தொடர்ந்து ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கலாநிதி மாறன் ரஜினிக்கு போட்டி ரஜினிதான் வேறுயாரும் இல்லை, ரஜினி சாருக்கு இப்போ 72 வயசு ஆகுது. இப்பவும் பல தயாரிப்பாளர்கள் அவர் பின்னாடி வரிசையில் நிக்குறாங்க. அதே மாதிரி உங்களுக்கும் நின்னா அப்போ சொல்லுங்க நான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று. அது வரைக்கும் இந்திய திரையுலகிலே ரஜினி சார் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்றார்.

இவையனைத்தும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சண்டையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. அதன் தாக்கத்தால் தொடர்ந்து புதிய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் சரி, இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளிலும் இதைப் பற்றி தான் பிரபலங்களும் மேடைகளில் பேசி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யைப் பற்றி பேசி உள்ளனர். மேலும் தற்போது வெளியான மாவீரன் படத்தின் ஆடியோ லான்ச்சிலும் விஜய்யைப் பற்றி பேசி உள்ளனர். அதில் பேசிய மிஷ்கின், லியோ என்றால் சிங்கம் பா.. விஜய் சிங்கம் தான்.. பல வருடங்களுக்கு முன்னதாக நான் விஜய் நடித்த யூத் திரைப்படத்தில் பணியாற்றினேன். அப்போது என்னிடம் விஜய் எப்படி பேசினாரோ.. இப்போதும் அவர் அப்படித்தான் என்னிடம் பேசினார். அவர் ஒரு குழந்தை” என்று பேசியுள்ளார்.

இப்போது கூட அட்லி- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லீ விஜய் குறித்து ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார். “ஜவான் படம் நடப்பதற்கு காரணமே விஜய் அண்ணாதான். நாமெல்லாம் விஜய்யின் உண்மையான ரசிகன் கொடுத்த வாக்கை மீறமாட்டோம். என்னை கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியே கொண்டு வந்ததே விஜய் அண்ணன்தான்” என விஜய் மீது தனக்கு இருக்கும் பாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் அட்லீ.

அதே சமயம் அந்த மேடையை பயன்படுத்தி அட்லி சைட் கேப்பில் விஜய் இடம் வாய்ப்பு கேட்டிருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது சந்திரமுகி 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸும் விஜய்யை பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, “சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் எப்போதாவது யாரிடமாவது கேட்டிருக்கிறாரா?

அல்லது அவர் எங்காவது அறிவித்தாரா? எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று. நான் எப்போது விஜய்யை சந்தித்தாலும், அவர் என்னிடம் தலைவர் நன்றாக இருக்கிறாரா? என்று தான் முதலில் கேட்பார். அதனால் விஜய்க்கு ரஜினி சார் மீது மரியாதை இருக்கிறது. சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் போது, ‘பீஸ்ட் படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. படம் சூப்பராக இருக்கிறது. வசூல் நன்றாக இருக்கிறது.

சன் டிவியிலிருந்து சொன்னார்கள் என்று சொல்வார். அதனால் இந்த இருவருக்குள் எந்த பிரச்சனையும் இல்லை” என்று பேசியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களின் மேடைகளில் விஜய் தான் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக இருந்து அலற விட்டு வருகிறார்.