சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களம் இறங்கிய இமான் முதல் மனைவி… அடுத்தடுத்து பரபரப்பு…

0
Follow on Google News

தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் ஆரம்ப கட்ட சினிமாவில் தொடர்ந்து அவருடைய அணைத்து படங்களும் ஹிட் ஆக காரணமாக இருந்தது டி இமானின் இசை. சிவகார்த்திகேயன் மனம் கொத்தி பறவையில் ஆரம்பித்த இவர்களின் பயணம் நம்ம வீட்டு பிள்ளை வரை நீண்டது. சிவகார்த்திகேயனுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் டி. இமான்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் படங்கள் ஆரம்பக்கட்ட காலத்தில் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆக டி. இமான் முக்கிய காரணம் என கூறலாம். மேலும் சிவகார்த்திகேயன் முதன்முதலில் பாடியதும் இமானின் இசையில் தான். சினிமாவை தாண்டி சிவகார்த்திகேயன், இமான் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். ஆனால் திடீரென ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் – டி. இமான் காம்போ இணையவில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி. இமான் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் கூறியதாவது, “சிவகார்த்திகேயன் வளர்ச்சியை நான் அறிவேன். அவர் படங்களில் என் பாடல்கள் அனைத்தும் ஹிட்தான். ஆனால், அவர் எனக்கு செய்த துரோகத்தை மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன். அது என் சொந்த விஷயம் என்பதால் வெளியே சொல்ல முடியாது.

வெளியே சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம்.” என பேசிய டி இமான். மேலும், “அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு.

அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை அவரால் சொல்லமுடியாது” என்று மிக உருக்கமாக டி இமான் பேசியவர், உடனே குறுக்கிட்ட நெறியாளர் நீங்கள் அவரிடம் ஏன் நேருக்கு நேராக கேட்டுவிடக் கூடாது. நான் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறேன் உன்னை நம்பி என் வீட்டில் சேர்த்தேனே உன்னை அளவுக்கு அதிகமாக நம்பியதால் நீ இப்படி செய்தாயா என கேட்கலாமே என்று அந்த தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த இமான் நான் கேட்டுவிட்டேன் என்று கூறினார். சரி அப்படி என்ன துரோகம் இழைத்தார் ஏன் உங்களால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்று கேட்க, அதற்கு இமான் குழந்தைகள் குறித்ததாக இருந்தது. குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நான் இதனை மூடி மறைக்கிறேன் என்று தெரிவித்தார் இமான். இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் இமான்.

அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போதே, என்ன காரணம் என ஆச்சர்யத்துடன் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், ‘சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்று இமான் குற்றம் சாட்டியிருப்பதை, இமான் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் டி.இமானின் முன்னாள் மனைவி மோகினா சிவகார்த்திகேயன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர், அவர் பாவம். நாங்கள் பிரிய கூடாது என நினைத்தார், எந்த ஒரு நண்பனும் பிரியகூடாது என்று தான் நினைப்பார். இமானுக்கு விவாகரத்து விஷயத்தில் சப்போர்ட் செய்யவில்லை, எனவே தான் அவர் சிவகார்த்திகேயன் மீது இப்படிபட்ட குற்றச்சாட்டு வைத்துள்ளார். பட வாய்ப்பு இல்லை என்பதால் இமான் இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார் என இமான் முன்னாள் மனைவி மௌனிகா தெரிவித்துள்ளார்.