இமான் குடும்பத்தில் புகுந்து சிவகார்த்திகேயன் செய்த கேவலமான செயல்…. அம்பலப்படுத்திய முக்கிய பிரபலம்…

0
Follow on Google News

இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன், அவருடைய ஆரம்பகட்டத சினிமாவில், அவருக்கான அங்கீகாரமும் இல்லை அடையாளமும் இல்லை. அந்த வகையில் சிவகார்த்திகேயன் என்கின்ற ஒரு நடிகர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் மிக முக்கிய பங்கு இசையமைப்பாளர் இமானுக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையில் வெளியான ஊதா கலர் ரிப்பன் என்கின்ற பாடல்கள் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழகம் எங்கும் உள்ள பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக அறியப்பட்டார். இதன் பின்பே சிவகார்த்திகேயன் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடிகராகவும் அடையாளப்படுத்தப்பட்டார். அதன் பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் இமான் இசையில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மிக பெரிய ஹிட் அடித்தது.

வருத்த படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்கள் மூலம் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தான். அதன் பின்பு சீமா ராஜ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் இமான் இருவரும் இணைந்து பணியாற்றி வந்த நிலையில்,

தொடர்ந்து இமானின் இசையில் சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் பாடல்களின் காரணமாக சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்தை பெற்று மிகப்பெரிய உயரத்துக்கு சென்றது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய இசையமைப்பாளர் இமானுக்கு மிகப்பெரிய துரோகத்தை சிவகார்த்திகேயன் செய்துள்ள சம்பவம் இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது.

தம்பி போல் நினைத்த சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை விளைவித்து விட்டதாக இமான் பேட்டி ஒன்றில் கூறியது பலரையும் கண் கலங்க வைத்தது. ஆனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் எந்த ஒரு தவறும் செய்யவில்லை அவர் மிகப்பெரிய யோக்கியர் என சமூக வலைதளங்களில் முட்டுக் கொடுத்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய இருக்கும் இடம் மறந்து நிலை மறந்து டி. இமான் குடும்பத்தில் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கியது, தற்பொழுது மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ள நிலையில், இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அதில் பிரபல இசையமைப்பாளரின் மனைவி உடன் மாஸ் நடிகர் தொடர்பில் இருந்தார். அந்த இசையமைபாளர் முதல் மனைவியை விவகாரத்து செய்ய காரணமே அந்த நடிகர் என்று கூறியுள்ளார். இது டி. இமான் சிவகார்த்திகேயன் விவகாரம் தான் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இமானின் தற்போதைய இந்த பேட்டி எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது சிவகார்த்திகேயன் இவ்வளவு மோசமானவரா? என சிவகார்த்திகேயனை கொண்டாடி வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் சிவகார்த்திகேயன் இமேஜை மிக பெரிய அளவில் டேமேஜ் செய்துள்ளது.