சிம்பு சினிமா கேரியரை காலி செய்த கூல் சுரேஷ்.. மிக பெரிய பின்னடைவில் படவாய்ப்புகள் இல்லாமல் தவிப்பு..

0
Follow on Google News

நடிகர் சிம்பு பட வாய்ப்புகள் இல்லாமல் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக வீட்டிலே முடங்கி கிடந்த நிலையில் மாநாடு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகர் சிம்பு. சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருவதில்லை மேலும் இயக்குனர் சொல்வதைக் கேட்பதில்லை என்கின்ற பல குற்றச்சாட்டுகள் சிம்பு மீது இருந்ததை தொடர்ந்து அவருக்கான பட வாய்ப்புகள் இதற்கு முன்பு இல்லாமல் இருந்தது.

இருந்தாலும் மாநாடு படத்திற்குப் பின்பு மீண்டும் சினிமாவில் மறுவாழ்வு பெற்ற நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு வெளியான மாநாடு பட வெற்றியை வைத்து வியாபார ரீதியில் விற்பனை செய்யப்பட்டாலும் படம் வந்த முதல் நாளிலே அட்டர் ஃபிளாப் ஆனது.

மாநாடு பட வெற்றிக்கு பின்பு நடிகர் சிலம்பரசன் தன்னுடைய சம்பளத்தை 35 கோடியாக உயர்த்தி உள்ளார். ஆனால் வெந்து தணிந்தது காடு படம் தோல்விக்கு பின்பு, இதற்கு முன்பு கமிட்டான படங்கள் கூட கைவிடப்பட்டு வருகிறது. இதனால் சிம்புவுக்கு தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் என்பவர் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் ப்ரோமோஷன் என்கிற பெயரில் சிலம்பரசனை புகழ்ந்து வருவது குறித்து திரைப்பட விமர்சிகர்கள், கூல் சுரேஷ் ஒரு ஆள் போதும் நடிகர் சிலம்பரசன் சினிமா கேரியரை காலி செய்து விடுவார், அதே நேரத்தில் கூல் சுரேஷ் தொடர்ந்து சிலம்பரசன் ப்ரோமோஷன் செய்து வருவது அது சிம்புவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதை சிம்பு உணர வேண்டும் என்று பலர் அறிவுறுத்தி வருகின்றனர்.