வாயை கொடுத்த பிஸ்மி…. கிழித்து தொங்க விட்ட இயக்குனர் பாலா… இந்த அவமாவனம் தேவையா.?

0
Follow on Google News

வலைப்பேச்சு என்கின்ற யூட்யூப் சேனல் மூலம் பிரபலமானவர் பிஸ்மி. தனக்கு தான் எல்லாம் தெரியும், தான் மிக பெரிய உத்தம்ம புத்திரன் என்பது போன்று, ஊருக்கெல்லாம் அட்வைஸ் செய்து வருகின்றவர். குறிப்பாக சமீபத்தின் நடிகர் சூர்யா நடித்த புதிய படத்தின் போஸ்டர் ஒன்று ரிலீஸ் ஆனது, அதில் சூர்யா புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. உடனே பொங்கி எழுந்த பிஸ்மி, சூர்யா இப்படி செய்வதால் அவரது ரசிகர்கள் கேட்டு போக மாட்டார்களா.? என கேள்வி எழுப்பிய பிஸ்மி வரலாறை தோண்டினால் இதை விட மோசமாக இருக்கிறது.

நம்ம நிகழ்ச்சியில் நாகரிகமாக பேச வேண்டும், அந்தரங்கங்கள் பற்றி பேச கூடாது, கட்டு கோப்பாக நம்ம நிகழ்ச்சி இருக்க வேண்டும், என ஒவ்வொரு பேட்டியிலும் பேசும் பிஸ்மி, சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன் என்றும், சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன் இருந்தாலும் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது அதனால் சொல்லுகிறேன் என பல நடிகர், நடிகைகள் தனிப்பட்ட வாழ்க்கைக்குறித்து ஒரு க் வைத்தது போன்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.

அதிலும் எதாவது ஒரு நடிகர், நடிகைககள் சர்ச்சையில் சிக்கிவிட்டால், அய்யோ இவர் செய்கிற அட்வைஸ் இருக்கே அப்பப்பா காதில் ரத்தம் வரும் அளவுக்கு தன்னை பெரிய ஞானி என வெளிக்காட்டும் அளவுக்கு அட்வைஸ் செய்யும் பிஸ்மி, ஒரு முறை கிசு கிசு செய்திகளுக்கு பெயர் பெற்ற பயில்வான் ரங்கநாதன் பற்றி பேச, அதற்கு பதிலடி கொடுத்த பேசிய பயில்வான் ரங்கநாதன். பாட்டு புத்தகம் விற்பனை செய்து வந்தவர் தான் பிஸ்மி.

ஒரு முக்கிய பிரபலத்தின் தங்கச்சியை காதலித்து, திருமணம் செய்து ஏமாற்றி பின்பு கழட்டி விட்டவர் என்றும், பலமுறை சினிமா குறித்து தவறான செய்திகளை தெரிவித்ததற்காக, மூன்று முறை தயாரிப்பாளர் சங்கத்தில் மன்னிப்பு கேட்டவர் பிஸ்மி என பிஸ்மியின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய பயில்வான், பாம்பை சீண்டினால் அது கொத்தாம விடாது, அது போன்று தான் என்னை சீண்டினால் நான் பதிலடி கொடுப்பேன் பயில்வான் பதிலடிக்கு பின்பு பயில்வான் குறித்து எந்த ஒரு பேட்டியிலும் மூச்சு விட வில்லை பிஸ்மி.

இந்நிலையில் கசப்பு கடை காரனிடம் ஆடு தலையை தானாக கொடுத்தது போன்று, இயக்குனர் பாலாவிடம் சிக்கிய பிஸ்மிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் காற்றில் பறந்து வருகிறது. பாலா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் ப்ரோமோஷனில் பாலா கலந்து கொண்டிருந்தார். அங்கே இருந்த பத்திரிகையாளர்கள் பாலாவை பார்த்து கேள்வி எழுப்பினார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கு சென்ற பத்திரிகையாளர் பிஸ்மி, மேடையில் இருந்த பாலாவை நோக்கி, உங்களைப் போன்ற தரமான இயக்குனர்கள் கமர்சியல் பேய் படங்கள் எடுக்கலாமா’ என்று பாலாவிடம் கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பாலா நீங்கள் எடுத்த கமர்சியல் சினிமாவை விடவா என்று சொல்லிவிட்டு ஒரு நக்கல் சிரிப்பு சிரித்து விட்டு நான் கமர்சியல் திரைப்படம் எடுத்து விட்டேன் என பாலா தெரிவிக்க. பிஸ்மி தலையில் கையை வைத்து குனிந்து கொள்கிறார்.

இருந்தாலும் பாலா விடுவதாக இல்லை. பிஸ்மியை நோக்கி நீங்கள் தயாரித்த ஒரு படத்தை நான் பார்த்திருக்கிறேன். அதில் நீங்கள் ஒரு கேரக்டரில் நடித்திருந்தீர்கள் அதையும் பார்த்தேன்’ என்று கூற, பிஸ்மி ஏன்டா இவரிடம் வாயை கொடுத்தோம் என அவமானத்தில் தலையை குனிந்து கொள்கிறார். பாலா பேசிய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த பிஸ்மி அப்படி என்ன கேரக்டரில் நடித்து இருக்கிறார் என தேடி பிஸ்மியை வெச்சு செய்து வருகிறார்கள்.

பிஸ்மி நடித்த அந்த கேரட்டர் படு கேவலமாக உள்ளது. அதாவது பேருந்தில் பெண்களை உரசும் ஒரு காட்சியில் பிஸ்மி நடித்திருப்பார். மேலும் பெண்கள் மனக்கேடாக கேட்டாலும் பெண்களை தவறாக பார்க்கும் கட்சியில் பிஸ்மி நடித்து இருப்பார். அதைத்தான் பாலா குறிப்பிட்டு இருப்பார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக்கப்பட்டு பிஸ்மியின் மானம் காற்றில் பறந்து வருகிறது.