விஜயை குளிர வைக்க அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்து காலில் விழுந்த தயாரிப்பாளர்..! யார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் அவருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரை மீண்டும் எந்த ஒரு சூழலிலும் அவர் முகத்தை கூட பார்த்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்க கூடியவர் தான் அஜித்குமார். மேலும் அதிகம் கோபப்படக்கூடியவர் அஜித் என்றும், ஆனால் அவரின் கோபத்தின் வெளிப்பாடு சற்று வித்தியாசமாக இருக்கும் , அதாவது யார் மீது அவருக்கு கோபம் அதிகமாக இருக்கிறதோ அவர்களிடம் சண்டை போடுவதை தவிர்த்து அவர்களை விட்டு விலகி சென்று விடுவார் அஜித்குமார்.

ராஜா படத்தில் அஜித்குமார் கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருந்த போது அதே படத்தில் நடித்த நடிகர் வடிவேலு, ஒருமையில் அஜித்தை அழைத்துள்ளார், இது அஜித்துக்கு பிடிக்கவில்லை இது குறித்து இயக்குனரிடம் வருத்தப்பட்டுள்ளார் அஜித், இதனை தொடர்ந்து இயக்குனர் அஜித்குமாரை ஒருமையில் அழைக்க வேண்டாம், அவர் சங்கட படுகிறார் என வடிவேலுவிடம் தெரிவிக்க அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அஜித்தை ஒருமையில் அழைத்துள்ளார் வடிவேலு.

இதை மிக பெரிய அவமானமாக கருதினார் அஜித்குமார். இந்த சம்பவத்துக்கு பின்பு இதுவரை வடிவேலு உடன் இணைந்து நடிப்பதை முற்றிலும் தவித்து வருகிறார் அஜித் குமார். இதே போன்று இயக்குனர் பாலா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் கடவுள் படத்தில் இருந்து வெளியேறினார் அஜித், எவ்வளவோ பேசியும் பாலா படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் அஜித்குமார். இப்படி தான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க கூடியவர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் AM ரத்தினம், இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து படம் இயக்க முயற்சித்துள்ளார் ஆனால் கால் சீட் கிடைக்கவில்லை. இதனால் அஜித் மீது செம்ம கடுப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தை AM ரத்தினம் தயாரித்து இருந்தார். இந்த படம் மெகா ஹிட் கொடுத்து பெரும் லாபத்தை பெற்று தந்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பின், கில்லி படத்தை தயாரிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் மனதை குளிரவைக்க தயாரிப்பாளர் AM ரத்தினம் மிக கடுமையாக அஜித்தை விமர்சனம் செய்து பேசினார். அஜித் இனி சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார் என பேசியதாக கூறப்படுகிறது. இதை அஜித் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்தியன், தூள், ரன், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர் AM ரத்தினம்.

கில்லி பட வெற்றியின் போது அஜித்தை ஆணவத்தை கடுமையாக பேசியதற்கு பின்பு, தொடர்ந்து சுமார் 8 படங்கள் வரை அவர் தயாரிப்பில் வெளியான அணைத்து படங்களும் தோல்வியை தழுவியது. இதன் பின்பு யாரை சில வருடங்களுக்கு முன் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார் என்று AM ரத்தினம் பேசினாரோ. அதே அஜித்திடம் கால் சீட் கேட்டு சென்றார். ஆனால் அஜித் பழசை ஏதும் மனதில் வைத்து கொள்ளாமல் AM ரத்தினம் சூழல் அறிந்து உதவும் மனப்பான்மையில் அவர் தயாரிப்பில் ஆரம்பம் படத்தில் நடிக்க கால் சீட் கொடுத்தார்.

ஆனால் ஆரம்பம் படம் சரி வர போகவில்லை. இருந்தும் மீண்டும் இரண்டு படங்கள் AM ரத்தினம் தயாரிப்பில், என்னை அறிந்தால், வேதாளம் போன்ற படங்களில் நடித்து கொடுத்து மறு வாழ்வு கொடுத்தார் அஜிகுமார். இந்நிலையில் தன்னை வசை பாடியவர்களை கூட மன்னித்து மறுவாழ்வு கொடுத்தவர் அஜிகுமார் என்பது AM ரத்தினம் விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது என அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீயெல்லாம் சோறு தான் சாப்புடுறீயா.? சிம்புவை வெளுத்து வாங்கிய ஹரி…எதற்கு தெரியுமா.?