சினிமா விமர்சகர் பிரஷாந்தின் மன்மத லீலைகள்..! இளம்பெண்கள் முதல் நடிகை பிரியா ஆனந்த் வரை..!

0
Follow on Google News

instagram incluencer மற்றும் திரைப்பட விமர்சகருமான பிரசாந்த் ரங்கசாமி சோசியல் மீடியாவில் பிரபலமானவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக இவர் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் எப்படி படங்களுக்கு விமர்சனங்கள் கொடுக்கிறேன் என சர்ச்சையில் சிக்குவாரோ, அதேபோல் தான் இந்த பிரசாந்த் ரங்கசாமியும் சர்ச்சையில் சிக்கி வருவார்.

திரைப்பட விமர்சனங்களுக்கு காசு வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்வதாக ஏற்கனவே இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இப்படி இவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ள நிலையில், தற்போது பல பெண்களிடமும், நடிகை பிரியா ஆனந்திடமும் அத்துமீறி பேசி தனது மன்மத லீலைகளை காட்டி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரசாந்த் ரங்கசாமி திரைப்பட விமர்சகராக வெளியே நல்லவர் போல் வேஷம் போட்டு வந்தாலும், தற்போது அவர் செய்த பல மன்மத லீலைகள் வெளியாகி அவரின் முகத்திரையை கிழித்துள்ளது. முதலில் இவர் ஒரு பெண்ணிடம் காதல் மன்னனாக மாறி, அவருக்கு மெசேஜில் வலைவிரித்த நிலையில், இது குறித்த ஸ்கிரீன் ஷார்ட் வைரலாகி வருகிறது. அதில் அந்த பெண் எப்படி இருக்கீங்க என கேட்க, அதற்கு பிரஷாந்த், நீங்கள் என்னுடைய பல நாள் காதல் எனக் கூறி பேச துவங்கியுள்ளார்.

உடனே அந்த பெண் நாசுக்காக இவரை தவிர்க்க பார்க்கிறார் . ஆனால் பிரஷாந்த் உண்மையா செல்கிறேன் நீ செம்ம ஃபிகர் என்றெல்லாம் பேசியுள்ளார். மேலும் அதேபோல் வேறு பெண்ணிடமும் ரொமேன்ஸாக பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பெண்களை பிரஷாந்த் ரங்கசாமியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று #SaveGirlsFromPrashanth என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் இப்படி முகம் தெரியாத பெண்களிடம் தன்னுடைய மன்மத லீலைகளை காட்டி வந்த பிரசாந்த், நடிகை பிரியா ஆனந்தையும் விட்டு வைக்கவில்லை. தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி என பல படங்களில் நடித்த இவர், சமீபத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி தனது புகைப்படங்களையும் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார். அப்படித்தான் பிரியா ஆனந்த் தன்னுடைய கவர்ச்சி படங்களை பதிவிட்ட போது, திரைப்பட விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி தன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் மற்ற பெண்களிடம் பேசுவது போல் இவரிடமும், முரட்டு சிங்கிள்ஸ் பாவம் Ms.பிரியா ஆனந்த் என வரம்பு மீறி ட்வீட் போட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ப்ரியா ஆனந்த் சுடச்சுட பதிலடி கொடுப்பது என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என, பிரசாந்த் டீவீட் போட்ட இரண்டே நிமிடத்தில், குரங்கு எமோஜிகள் கண்,காது,வாயை மூடுவது போன்ற போட்டு, பாண்டா என திட்டி அதன் அருகில் ஒரு பூவையும் வைத்திருக்கிறார். குறிப்பாக இந்த பிரசாந்தை ரசிகர்கள் பலரும் பாண்டா என்று தான் விமர்சிப்பார்கள். அதேபோல் தான் நடிகை பிரியா ஆனந்தும் பாண்டா என விமர்சித்ததை பார்த்த ரசிகர்கள் சரியான பதிலடி என கூறி வருகின்றனர்.

மேலும் பிரசாந்த்தும் மீண்டும் சும்மா இல்லாமல் பிரியா ஆனந்தின் பாண்டா என்ற ட்வீட்டுக்கு சோகமான எமோஜிகளை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், முகத்தை சோகமாக வைத்துக் கொண்டால், நீ நல்லவனாக மாறி விடுவாயா என விமர்சித்து, இவன் பிரியா ஆனந்திடம் மற்றும் டபுள் மீனிங்கில் பேசுபவன் இல்லை, பல இளம் பெண்களிடமும் டபுள் மீனிங்கில் பேசுபவன் தான் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது பிரசாந்த் பல பெண்களிடம் தன் மன்மத லீலைகளை காட்டிய ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.