அடியே… இதுக்காடி பணம் வாங்கின… நயன்தாராவை வெளுத்து வாங்கிய பிரபலம்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் இவர் தொடர்ந்து நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோரை மிக கடுமையாக பேசி வருகின்றவர், விஜய் அஜித் ரசிகர்களிடம் இருந்து எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், உன் மிரட்டலுக்கு பயப்படும் நபர் நான் இல்லை, இது மாதிரி நிறைய மிரட்டல்களை பார்த்துவிட்டேன், தேவையில்லாமல் சிறைக்கு சென்றுவிட வேண்டாம் என தன்னை மிரட்டிய அஜித், விஜய் ரசிகர்களுக்கு பதில் எச்சரிக்கை விடுத்தார் கே.ராஜன்.

சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே.ராஜன், ஒரு நடிகையிடம் நீங்க ஏன் ஆடியோ நிகழ்ச்சிகள் எல்லாம் போவதில்லை என்று கேள்வி கேட்டால், அதற்கு அவர் பதில் சொல்கிறார். அந்த படத்தை நான் நல்லா இருக்கு என்று சொல்லி, அந்த படம் நல்லா இல்லாமல் போனால், எனக்குத்தான் கெட்டபெயர் என்று சொல்கிறார், அடிப்பாவி 6 கோடி சம்பளம் அதுக்காடி நீ வாங்கின. இப்படியெல்லாம் பேசினால் நீ தான் சீக்கிரம் நல்லா இல்லாமல் போய்விடுவாய்.

அப்படி எல்லாம் பேசக்கூடாது என தனது கோபத்தை வெளிப்படுத்திய கே.ராஜன், மேலும்.நயன்தாரா கோபித்துக்கொண்டு என்னை சாபமிட்டால், அப்புறம் நான் வயாகரா தான். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதாநாயனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதாநாயகனுக்கு அதிக செலவு செய்தோம் என்றால், அந்த படம் தோல்வி தான், கதை இல்லாத எந்த படமும் நிலைத்து நிற்காது, வெற்றியும் பெறாது என பேசிய கே.ராஜன்.

ஒரு நடிகர் நடித்த கடைசி ந இரண்டு படம் தோல்வி என்று நடிகர் அஜித்குமார் பெயரை குறிப்பிடாமல் பேசிய கே.ராஜன், மேலும் அந்த இரண்டு படத்தை தயாரித்தவர் ஒரே தயாரிப்பாளர். இப்போது அந்த தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை சரி செய்வதற்காக மேலும் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் அந்த நடிகர். ஆனால் சம்பளம் அவருக்கு சுமார் 100 கோடி, புதிய படத்தில் 40 கோடி வரை சம்பளத்தை ஏற்றியுள்ளார் அந்த நடிகர்.

இந்தி தயாரிப்பாளர் ஸ்ரீதேவி புருஷன் வறுமையில் வாடுகிறார். சாப்பாடு கூட கஷ்டப்படுகிறார், ஐயோ… பாவம், அதனால்தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் அந்த நடிகர் என்றும், மேலும் மற்றொரு நடிகர் ஒருவர் இருக்கிறார் என நடிகர் விஜய் பெயரை குறிப்பிடாமல்,அந்த நடிகர் தெலுங்கு பக்கம் போய்விட்டார். இங்க இருக்கிற எல்லா தயாரிப்பாளர்களையும் நஷ்டம் அடைய வைத்து விட்டு இப்ப தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

இங்கே இருக்கும் எத்தனை தயாரிப்பாளரை அவர் நஷ்டம் அடையவைத்துள்ளார் என்பதை என்னால் கணக்கிட்டு சொல்ல முடியும், பாவம் 5 தயாரிப்பாளருக்கு அந்த நடிகரால் பெரும் நஷ்டம். தமிழ் தயாரிப்பாளர்களை நஷ்டம் அடைய வைத்துவிட்டு தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார் அந்த நடிகர் என பேசினார் கே.ராஜன்.

நீ யோக்கியமா.? ஐஸ்வர்யா கள்ள உறவை போட்டு உடைத்த தனுஷ்..! பிரிவுக்கு இது தான் காரணமாம்..