14 வயது சிறுவனுடன் ஐஸ்வர்யாவுக்கு தொடர்பா..? கைதுக்கு பயந்து மன்னிப்பு கேட்டு கதறும் பயில்வான்..!

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இவருடைய திருமணம் 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தனுஷ் வயது 21, ஐஸ்வர்யா வயது 23, கணவர் தனுஷை விட மனைவி ஐஸ்வர்யாவுக்கு இரண்டு வயது அதிகம். சுமார் 18 ஆண்டுகள் கடந்த இவர்களின் திருமணம் வாழ்க்கை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், பிரபல சினிமா நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர் சில காரணங்களை அவுத்து விட்டுள்ளார். ஆனால் அவர் சொன்ன சில விஷயங்கள் உண்மையில்லை என நிரூபணமாகி உள்ளது, அதில் ஐஸ்வர்யா மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், மேலும் அவரது மாமா பையன் இசை அமைப்பாளர் அனிருத் உடன் திருமணத்துக்கு முன்பே உறவில் இருந்ததாக குறிப்பிட்டார்.

அனிருத்- ஐஸ்வர்யா விவகாரம் தனுஷ்க்கு தெரிந்த பின்பு தான் அனிருத் உடன் தொடர்பை தனுஷ் துண்டித்ததாக பயில்வான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா திருமணம் செய்த போது அவருக்கு வயது 23, அப்போது அனிருத் 14 வயது சிறுவனாக இருந்துள்ளார். அப்படி இருக்கும் போது எப்படி இருவருக்கு திருமணத்துக்கு முன்பே பயில்வான் கூறுவது போன்று தவறான தொடர்பு இருந்திருக்க முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் அனிருத் அத்தை பொண்ணு தான் ஐஸ்வர்யா என்றாலும் கூட அவரை அக்கா என்று தான் இதுவரை அழைத்து வருகிறார், அவர் தனக்கு அக்கா போன்றவர் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த ஒரு அடிப்படை முகாந்திரம் இல்லாமல், இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் தகாத உறவு இருப்பதாகவும், அதனால் தான் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் பிரச்சனை வந்ததாக பயில்வான் பேசியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மேலும் இது தொடர்பாக அனிருத் தரப்பில் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வழக்கு தொடர்ந்தால் கடும் சிக்கலாகி விடும் என உணர்ந்து, தான் பேசி இருந்தது யாருடைய மனது புண் பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ள பயில்வான். தான் பேசியது பொய்யென கண்டு பிடித்துவிட்டார்கள்.

இனி இதை வைத்து வண்டியை நீண்ட தூரம் ஓட்ட முடியாது என புரிந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் மன்னிப்பு கேட்டுள்ளார், அதாவது மன்னிப்பு என குறிப்பிடாமல் சுற்றி வளைத்து வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இது போன்று தொடர்ந்து பல கப்சா கதைகளை நடிகர் மற்றும் நடிகைகள் படுக்கையறையில் தானே நேரில் பார்த்தது போன்று அவிழ்த்து விட்டு வரும் பயில்வான் முதல் முறையாக தற்போது வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.