விஜயகாந்த்க்கு மரணம்… அஞ்சலி செலுத்த வராமல் பார்ட்டியில் செம்ம என்ஜாய் செய்த அஜித்தின் மனிதநேயமற்ற செயல்..

0
Follow on Google News

நடிகர் அஜித் பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார், அவருடைய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட கலந்து கொள்ள மாட்டார், மேலும் அஜித் விளம்பரத்தை விரும்பமாட்டார் என ஒரு பக்கம் அவருடைய ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டாலும், அஜித் பைக் பயணம், அஜித் வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வது, சாப்பிடுவது போன்ற போட்டோக்கள், சமூக வலைதளத்தில் வைரலாகும் இந்த போட்டோ அஜித்துக்கு தெரியாமல் வெளியாகாது.

அந்த வகையில் விளம்பரத்தை விரும்பாத அஜித் மறைமுகமாக இது மாதிரி பப்லிசிட்டி வேலையை செய்து வருகின்றவர் அஜித் என்கிற விமர்சனம் உண்டு. இந்நிலையில் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, நடிகர் சங்க கடனை அடைக்க நடந்த கலைநிகழ்ச்சியில் அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் உன்ன விஜயகாந்த் உத்தரவை ஏற்று, ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் என தமிழ் திரையுலக நட்சத்திரகள் அனைவரும் புறப்பட்டு மலேசியா , சிங்கப்பூர் நிகழ்ச்சிக்கு சென்றனர்.

ஆனால், அஜித் தன்னால் வரமுடியாது என சாக்கு போக்கு சொல்லியுள்ளார், இருந்தும் விஜயகாந்த் தரப்பில் இருந்து கண்டிப்பாக வரவேண்டும் என கட்டளையிட்டு இறுதியில் அஜித் மட்டும் அந்த அந்த கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இப்படி அஜித் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தாலும் கூட, சக நடிகரின் மரணத்திற்கு கூடவா வர கூடாது என விஜயகாந்த் மரணத்திற்கு அஜித் நேரில் வந்த அஞ்சலி செலுத்தாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

விஜயகாந்த் மரணத்தின் போது அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருப்பதால், விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. சென்னை வந்ததும் நேரில் வந்து உங்களை பார்க்கிறேன் என அஜித் போனில் விஜயகாந்த் மனைவியிடம் பேசியதாக ஒரு பொய்யான செய்தி பரவியது. ஆனால் விஜயகாந்த் P.R.O ஒருவரை தொடர்பு கொண்ட அஜித் மேனஜர் சுரேஷ் சந்திரா, அஜித்குமார் வெளிநாடுகளில் உள்ளார், அதனால் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவரால் வர முடியாது,

அதனால் இரங்கல் தெரிவித்து குறு செய்தி ஒன்று அஜித் அனுப்பி வைத்துள்ளார், அதை விஜயகாந்த் மனைவிக்கு பார்வார்ட் பண்ண வேண்டும் என சுரேஷ் சந்திரா தெரிவிக்க, அதற்கு சார் விஜயகாந்த் உடல் அருகே பிரேமலதா இருக்காங்க, நான் தொலைவில் உள்ளேன், கூட்டத்துக்குள் என்னால் செல்ல முடியாது என விஜயகாந்த் PRO பதில் அளித்துள்ளார்,

தொலைபேசியில் தொடர்பு கொள்ள கூட முடியாமல் குறுச்செய்தியை அனுப்பி இரங்கல் தெரிவிக்கும் அஜித், விஜயகாந்த் மரணத்தின் போது, ஓய்விற்காக குடும்பத்துடன் அஜித் துபாய் சென்றிருக்கிறார். பின் தன்னுடைய மனைவி ஷாலினி, மகன், மகளுடன் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். மேலும், அஜித் துபாயில் குடும்பத்துடன் ஜாலியாக கப்பலில் எல்லாம் சுற்றி பார்த்திருக்கிறார்கள். அப்போது அஜித்தை பார்த்து ரசிகர்கள் தல, தல என்று ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறார்கள். அஜித் கப்பலில் இருந்து கொண்டே கையசைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் விஜயகாந்த் மரணத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தாத அஜித் போட்டு இருக்கும் குத்தாட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி, அஜித்தை மக்கள் கழுவி கழுவி ஊத்தி வருகிறார்கள்.புத்தாண்டு கொண்டாட்டத்தின் அஜித் அவர்கள் பெண் ரசிகையுடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் விஜயகாந்தின் இறப்பிற்கு வரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, ஆனால் கேப்டன் மறைந்து அனைவரும் சோகத்தில் இருக்கும் போது கொஞ்சம் கூட கவலையில்லாமல் அஜித் குத்தாட்டம் போடுவது, அஜித்துக்கு மனிதநேயம் கொஞ்சம் கூட இல்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.