கேப்டன் குடும்பம் என்ன சாப்பாடுக்கு வழியில்லாமயா இருக்கு… தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் நடிகர் சங்கம்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவை வாழ வைத்தவர் என்று சொல்லும் அளவுக்கு எண்ணற்ற உதவிகளை தமிழ் சினிமாவிற்கு செய்த விஜயகாந்துக்கு செய்யும் நன்றி கடன் இது தானா.? என என மக்கள் காரி துப்பு வகையில் நடந்து கொண்டிருக்கிறது நடிகர் சங்கமும் நடிகர் நடிகைகளும். சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற விஜயகாந்த்க்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே வந்து விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் தமிழ் சினிமா துறையில் இருந்து 25 சதவீதம் பேர் கூட வந்து விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தாமல் உதாசீனப்படுத்தி விட்டார்கள்.

ஏதோ கடமைக்கு செய்ய வேண்டுமே. மக்கள் காரி துப்புரார்களே அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காகவே விஜயகாந்துக்கான இரங்கல் கூட்டத்தை நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தது போன்று அமைந்திருந்தது சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற விஜயகாந்த் காண இரங்கல் கூட்டம்.

விஜயகாந்த் மரணம் அடைந்த பின்பு விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடித்து அவரரின் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுக்க தயார் என தற்பொழுது விஜயகாந்த் மரணத்திற்கு கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்து தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் நடிகர்கள், விஜயகாந்த் உயிருடன் இருக்கும் வரை விஜயகாந்துக்கு சண்முக பாண்டியன் என்கின்ற ஒரு மகன் இருக்கிறார்.

அவர் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்கின்ற இந்த விஷயம் இதுவரை யாருக்குமே தெரியாதா.? விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போதெல்லாம் அந்த எண்ணம் சிறிதும் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு தோன்றவில்லை. இப்போது விஜயகாந்த்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு, சண்முக பாண்டியனுக்கு உதவி செய்ய தயார் என பொது மேடைகளில் பேசி ஏதோ விஜயகாந்த் அவருடைய குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுச் சென்றது போன்று அந்த மாமனிதனின் குடும்பத்தை இவர்கள் தான் வாழ வைக்க போவதாகவும் மேடைகளில் நாங்கள் உதவி செய்கிறோம் எப்போது போன்று பேசி வருகிறார்கள்.

உதவி செய்வதாக இருந்தால் சத்தம் இல்லாமல் அவர்கள் உதவி செய்ய முன் வரலாம், ஏதோ இந்த விஜயகாந்த் குடும்பத்திற்கு இவர்கள் பிச்சை போடுவது போன்று, நான் சண்முக பாண்டியனுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன், நான் சண்முக பாண்டியன் படத்தில் இணைந்து நடிக்கிறேன் என்று பேசுவதெல்லாம் ஒரு கை உதவி செய்வது மறு கைக்கு தெரியக்கூடாது என்று வள்ளலாக வாழ்ந்த விஜயகாந்த் குடும்பத்தை நேரில் கூப்பிட்டு வைத்து அசிங்க படுத்துவது போன்று உள்ளது என மக்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு நல்ல இயக்குனர்கள் அமைந்தால் நிச்சயம் அவர் தந்தையைப் போன்று மிகப்பெரிய வெற்றியடைவார், மேலும் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தை மக்கள் கொண்டாட தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயகாந்த் மகன் நடித்த மூன்று நடித்த படத்தின் பிரமோசனுக்கு கூட வராத நடிகர்கள் தற்பொழுது விஜயகாந்த் குடும்பத்திற்கு ஏதாவது செய்தால் மக்கள் நம்மளை மதிப்பார்கள் என்கின்ற ஒரு நாடகத்தை தான் தற்பொழுது நடிகர்கள் அரங்கேற்றிக் கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.