பழசை மறந்து நண்பனை கைவிடலாமா .? சிவகாத்திகேயன் ஏன் இப்படி செய்தார்.?

0
Follow on Google News

நடிகர் ப்ளாக் பாண்டி, தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் நடிகர் பிளாக் பாண்டி. தனது ஆரம்ப கட்ட சினிமா வாழ்க்கையின் போது அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பிளாக் பாண்டி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த காலத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளார் ப்ளாக் பாண்டி.

அந்த அளவுக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் பிளாக் பாண்டியும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது உச்ச நடிகராக இருந்து வருகின்றார், ஆனால் அவருடைய நண்பர் பிளாக் பண்டி அப்படி அல்ல, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றார்.

சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான பின்பும் தொடர்ந்து உச்ச நடிகராக ஆன பின்பும் கூட தினமும் தொலைபேசியில் பிளாட் பாண்டியும், சிவகார்த்திகேயனும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிளாக் பாண்டி சினிமா வாய்ப்புகள் இன்றி சிரமப்படுவதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது மேனேஜர் மூலம் ஒரு கவரில் சிறிய தொகையை வைத்து அவருக்கு கொடுத்து அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பண்டி, நடிகர் சிவகார்த்திகேயன் மேனேஜர் அவர்களிடம் எனக்கு பண உதவி வேண்டாம், என் நண்பன் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் எனக்கு சிறிய வேடங்கள் கொடுத்தால் போதும், நீங்கள் எடுத்து அவரிடம் சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்பு சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்புகொள்ள பிளாக் பாண்டி முயற்சி செய்தாலும் சிவகார்த்திகேயன் தொலைபேசியை எடுப்பதே இல்லை என கூறப்படுகிறது.

இதை வேதனையுடன் தனக்கு நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளார் பிளாக் பாண்டி, நானும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இன்று அவர் பெரிய நடிகராகி விட்டார், நான் தொடர்ந்து ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருக்கின்றேன். என்னுடைய தொலைபேசி அழைப்பை கூட தற்போது சிவகார்த்திகேயன் எடுக்கவில்லை. இதுதான் உலகம் என வேதனைப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அங்காடி தெரு படத்தில் பிளாக் பாண்டி நடித்த போது, அந்தப் படத்தின் நடிகை அஞ்சலி உடன் மிக நெருங்கிய நட்புடன் இருந்துள்ளார். தினமும் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிடுவது நிறைய பேசி பகிர்ந்து கொள்வது என நட்புடனே இருந்து வந்துள்ளார்கள் பிளாக் பாண்டி. அங்காடி படத்திற்கு பின்பு சுமார் ஒரு வருடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசுவது என நட்புடனே அஞ்சலி இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாக் பண்டி போன் செய்தால் அஞ்சலி எடுப்பதே இல்லையாம் இதை வருத்தத்துடன் தனது நண்பர்களுடன் தெரிவித்து வேதனையில் பிளாக் பண்டி இருப்பதாக கூறப்படுகிறது.