பிள்ளையை நல்லா வளர்த்துருக்கம்மா…அந்த விஷயத்தில் வனிதாவை மிஞ்சிய மகள் ஜோவிகா…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து ஏழாவது சீசனாக வெற்றி நடை போடுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே, பஞ்சாயத்திற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களிடையே வாக்குவாதம், சண்டை என்று விறுவிறுப்பாகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும்.

இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1 முதல் தொடங்கியுள்ளது. மேலும், இந்த முறை சீசனில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் உள்ளன. இதனால் ஆடியன்ஸ் பல எதிர்பார்ப்புகளுடன் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் 7 இல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களும் மக்களின் எதிர்பார்ப்புகளை வீணடிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். சீசன் 7 தொடங்கிய முதல் நாளிலேயே கலகம் நடைபெறத் தொடங்கி விட்டது. ஒரு பக்கம் பிரதீப்பின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ள நிலையில், இன்று நடிகை வனிதா விஜய குமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஜோவிகாவின் பேச்சு, “தாய் எட்டு அடி பாஞ்சா, குட்டி பதினாறு அடி பாயும்” என்றளவிற்கு அதிரடியாக இருந்துள்ளது என்றும் கூறலாம். ஆம், ஜோவிகா அவரை விட வயதில் மூத்தவரான நடிகை விசித்ராவிடம் சண்டை போட்டது சக போட்டியாளர்களையும், ரசிகர்களையும் மிரள வைத்துள்ளது. அப்படி, நடிகை விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே என்ன வாக்குவாதம் நடைபெற்றது என்பதை இங்கே பார்க்கலாம்.

ஜோவிகாவிற்கு படிப்பு மீது ஆர்வம் இல்லாததால் அவர் பள்ளிப் படிப்பை முடிக்காமல் இடையிலேயே நின்று விட்டார். இது குறித்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சுற்றிலேயே தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையிருப்பதாகவும், இதற்கு எனக்கு கல்வி தேவையில்லை என்றும் எல்லாம் அறிந்த ஞானி போல, அனுபவம் மிகுந்தவர் போல ஜோவிகா பேசியிருக்கிறார்.

இதைக் கேட்ட சக போட்டியாளர்கள் கம்முன்னு இருந்த நிலையில், நடிகை விசித்ரா ஜோவிகாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, “நீ டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. Basic education இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அத்தியாவசியம்” என்று கல்வியின் தேவை பற்றி கூறியிருக்கிறார்.

நடிகை விசித்ராவின் அறிவுரையை ஏற்க மறுத்த ஜோவிகா, விசித்ராவின் வயதுக்கு கூட மரியாதை தராமல் வாக்குவாதம் செய்து ஒருமையில் கண்டபடி பேசியுள்ளார். அதிலும், “டிக்கெட் புக் பண்ண ஏஜென்சி இருக்கு, பேங்க்ல தெரியலைனா போய் கேஷியர் கிட்ட கேளுங்க, அதுக்கு தான காசு குடுக்குறீங்க” என்று கல்வி அவசியமில்லை என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

ஜோவிகாவின் சிறிதும் பக்குவமில்லாத பேச்சும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் பேசும் குணமும் ரசிகர்களிடையே வெறுப்பைத் தூண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜோவிகாவின் ஆவேசமான வாதத்தைக் கேட்ட நடிகை விசித்ரா இதை நினைத்து கண்ணீர் விட மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள். ஜோவிகாவின் பேச்சு இப்போது சோஷியல் மீடியா முழுவதும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.