செருப்பால் அடிப்பேன்… ஒரு ஆணிடம் பெண் இப்படியா நடந்து கொள்வது… பிக் பாஸ் வீட்டில் ஆணுக்கு நடந்த சோகம்..

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அறுபது நாட்களை கடந்து பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் மோதல்கள் சற்று தூக்கலாகவே இருந்து வருகின்றது. ஒவ்வொரு போட்டியாளரும் சண்டை செய்வதற்கு தயங்குவதில்லை. அவ்வாறு சண்டை செய்ய தயங்கும் போட்டியாளரை ரசிகர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

சண்டை, சர்ச்சை, காதல் என ஒரு கமர்ஷியல் படத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாகவே ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். TRP ரேட்டிங்கும் வாரா வாரம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நிக்ஸன் தலைவரானார்.

நிக்சனின் கேப்டன்சியில் யாருக்காவது அநீதி நிகழ்ந்து இருக்கும் பட்சத்தில் வீட்டில் வைத்து இருக்கும் மணியை அடிக்கலாம். ஒருவேளை பெரும்பாலனோர் மணி அடிக்கும் பட்சத்தில் நிக்சனின் கேப்டன் பதிவு பறிக்கப்படுவதுடன் அவர் நேரடியாக இந்த வார நாமினேஷனில் இடம்பெறுவார் என்றும் அறிவித்து இருந்தார் பிக் பாஸ்.

இதன் பின் வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டிக்குள் டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்களும் நன்றாக விளையாடி இருந்தார்கள். இந்த வாரம் விஷ்ணு-அர்ச்சனா இடையே தான் அதிக சண்டை நடந்தது. பின் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேட் நடைபெற்றது. அதில் தினேஷ், சரவணன் விக்ரம், ஜோவிகா, மணி, கூல் சுரேஷ், விசித்ரா, பூர்ணிமா, அனன்யா, ஆகியோர் நாமினேட் ஆகினார்கள்.

இதில் விக்ரம் தான் வெளியேறுவார் என்று வார ஆரம்பத்தில் அனைவரும் யூகித்தனர். அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே விக்ரம் எதையும் சுவாரசியமாக செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டையில் கூட தலையிடவில்லை. இதனால் இவரை ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் தான் என்று சரவணன் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், இவர் எந்த ஒரு கன்டென்ட் கொடுக்காமல் இருப்பதால் மிக்சர் சாப்பிட தான் லாக்கி என்றெல்லாம் கிண்டல் அடித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நெட்டிசன்களின் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியுள்ளார் விக்ரம். பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருவதோடு, வீட்டில் சக போட்டியாளர்களும் சரவண விக்ரமை கிண்டல் செய்து வருகின்றனர். அவ்வளவு ஏன், கடந்த வாரம் வீட்டிற்குள் வந்த விஜய்யும் சரவண விக்ரமை கலாய்த்தார்.

இந்த நிலையில் சரவண விக்ரம் மற்றும் பூர்ணிமாவின் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. அதில், பூர்ணிமா, மாயா, நிக்சன் ஆகியோர் டீசர்ட்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விக்ரம் அந்த இடத்திற்கு வருகிறார். பூர்ணிமாவிடம் அவர் ஏதோ சொல்கிறார். அதற்கு பூர்ணிமா செருப்பால் அடிப்பேன் என்று சொல்கிறார்.

இதைக் கேட்டுக் கொண்டு விக்ரம் எதுவும் பேசாமல் திரும்பி திரும்பி பார்த்து செல்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள், முதுகுத்தண்டு இல்லாமல் இருப்பதால் தான் எல்லோரும் திட்டுகிறார்கள் என்றெல்லாம் விமர்சித்து கிண்டல் அடித்து வருகிறார்கள். அதே நேரம் பெண்கள் பாதுகாப்புக்கு உரிமை குரல் கொடுத்த பூர்ணிமா, ஒரு ஆணிடம் இவ்வாறு தான் பேசுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறுபக்கம் என்ன தான் விக்ரம் கேமில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தாலும், அவர் வீட்டில் இதுவரை யாரையும் காயப்படுத்தியதில்லை என்றும் மரியாதை குறைவாக நடத்தியதில்லை என்றும் நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.‌ மேலும், இதுபோன்ற விமர்சனங்களுக்கு அவரின் செயலின் மூலம் பதிலடி கொடுத்தால் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர முடிவதோடு, வீட்டில் இருப்பவர்களை எதிர்கொள்ள முடியும் என்பதே பலரது கருத்தாக இருந்து வருகின்றது.

மேலும் இந்த வாரம் ஜோவிகா வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் விக்ரமுக்கு மறு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். இனிமேலாவது அவர் குரல் கொடுத்து விளையாடினால் நீண்ட காலம் இந்த போட்டியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.