அடேங்கப்பா… பிக் பாஸ் வீட்டில் இருந்த விக்ரம் சம்பளம் இவ்வளவா.. மொத்த 84 நாள்.. இனி என்னப்பா விக்ரமுக்கு கவலை..

0
Follow on Google News

விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 84வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் ரசிகர்களை ஈர்க்கும்வகையில் அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் விக்ரம், விசித்ரா, ரவீனா ஆகிய மூன்று பேர் மட்டும் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் விக்ரம் அல்லது ரவீனா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் ரவீனா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், சரவண விக்ரம் கடந்த வாரம் வெளியேறிவிட்டார்.

இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து தற்போது வரை பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் அதை கண்டு கொள்ளவும் இல்லை, தலையிடுவதும் இல்லை. அதோடு அடிக்கடி இவர், தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்றும் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் ரசிகர்களுக்கு மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது.

அதே போல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்து அவர்களுக்கு ஜால்ரா அடித்ததும் ரசிகர்களுக்கு இவர் மீது கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கியது. கடந்த வாரம் பேமிலி ரௌண்டின் போது விக்ரமை பார்க்க அவரது தங்கை வந்து இருந்தார். அப்போது விக்ரமிடம் , பூர்ணிமாவை கூட ஏற்றுக்கொள்வேன். ஆனால், மாயாவை நான் ஏற்க மாட்டேன். உன்னிடம் நன்றாக பேசிவிட்டு உன் முதுகுக்கு பின்னாடி உன்னையே திட்டுகிறார்கள்.

யாரையும் நம்பாதே, யாருக்காகவும் விளையாடாதே என்றெல்லாம் அறிவுரை கூறி இருந்தார். அதே போல விக்ரம் குடும்பத்தினரும் மாயா மீது இருந்த வெறுப்பை அவர் மீது நேரடியாகவே காட்டி இருந்தனர். இதனால் விக்ரம் மீது செம காண்டில் இருந்தார் மாயா. இப்படி ஒரு நிலையில் நேற்று விக்ரம் வெளியேருவதாக அறிவித்த போது மாயா செய்த செயல்கள் தான் நெட்டிசன்களை பெரும் எரிச்சலடைய செய்துள்ளது. விக்ரம் வெளியேறுகிறார் என்ற அறிவிப்பை சொன்னதும் மாயா தனது முகத்தை மிகவும் வன்மத்துடன் வைத்து இருந்தார்.

இந்நிலையில் வெளியேறிய பிக் பாஸ் விக்ரமின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சீரியல் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு 18000 சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 84 நாட்கள் உள்ளே இருந்ததால் அவருக்கு 15 லட்சத்திற்கும் மேலே சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. சின்னத்திரை நடிகர் சரவண விக்ரமிற்கு, நடிக்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசை இருந்தது.

இதனால், முன்னணி நடிகர்கள் பேசும் டைலாக்கை ரீ-கிரியேட் செய்து வீடியோவாக வெளியிட ஆரம்பித்தார். இது, அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டுத்தது. இந்த தொடரில் அவர் பல அண்ணன்களுக்கு இளைய தம்பியாக ‘கண்ணன்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சரவண விக்ரம், பிக்பாஸ் போட்டியாளராக நுழைந்த போது அவர் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தது.

போட்டிக்குள் நுழைந்த முதல் வாரத்தில் அசட்டுத்தனமாக காமெடி செய்து கொண்டு இருந்த இவர், அடுத்த வாரத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த வாரம், இவர் பிக்பாஸ் வீட்டையும் போட்டியாளர்களையும் சரியாக நிர்வாகிக்காததால் வார இறுதியில் கமலின் அதிருப்தியை சம்பாதித்தார். இதையடுத்து, அவருக்கு ஸ்கிரீன் டைமும் குறைவாகவே கொடுக்கப்பட்டது. பெரிதாக ரசிகர்கள் மத்தியில் தெரியாமல் இருந்தார். இதையடுத்து, “பிக்பாஸ் டைட்டில் வின்னர் சரவண விக்ரம்” என இவருக்கு இவரே மிமிக்கிரி செய்து கூறிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.