பிக் பாஸ் வீட்டுக்கு வாங்க … பிரதீப்பை கெஞ்சும் விஜய் டிவி… தரமான பதிலடி கொடுத்து அனுப்பிய பிரதீப்…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. இதை பொறுத்து கொள்ள முடியாத சக போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை அவருக்கு எதிராக செய்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ்- பிரதீப் இருவருக்கு இடையில் மிக பெரிய சர்ச்சை வெடித்தது. இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள்.

ஆனால், நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனையை பெரிது படுத்தாமல், பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள். இந்நிலையில் இது வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை.

பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும். இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. அவர் இருந்தால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ரெட் கார்டு கொடுத்ததை தான் பார்வையாளர்களால் ஏற்க முடியவில்லை.

பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விஷயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டுவிட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது. பிரதீப்பிற்கு நடந்தது அநீதி அவரை மீண்டும் பிக் பாஸில் கொண்டு வர வேண்டும் என்றும் விஐய் டிவி ப்ரோமோக்களின் கீழ் Justiceforpradeep என்ற ஹேஷ் டேக்குகளை ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது, இதனால் கமல்ஹாசன் இதற்கு சுமுகமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று இருக்கிறாராம். எனவே இந்த வார இறுதியில் இந்த பிரச்சனையை பற்றி கமல்ஹாசன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் பிரதிப்பை அழைப்பதற்கான வேலையும் நடந்து வருகிறதாம்.

பிரதீப்பிடம் விஜய் தொலைக்காட்சியினர் தொடர்பு கொண்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு பேசிய பொழுது இந்த வீட்டிற்கு கண்டிப்பாக நான் வரவே மாட்டேன் என்று ஒத்த காலில் நிற்கின்றாராம். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் பிரதீப் ஆண்டனி. இந்நிலையில் தன்னை பற்றி வரும் மீம்ஸுகளை எல்லாம் பார்த்திருக்கிறது.

அதில் தனக்கு பிடித்த மீமை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் வீடு பத்தி எரிய அதை பார்த்து பிரதீப் ஆண்டனி ஆனந்தமாய் சிரிக்கும் மீம் தான் அவருக்கு பிடித்திருக்கிறதாம்.மேலும் யூ -டியூபர்ஸ்களுக்கும், கன்டென்ட் கிரியேட்டர்ஸ்களுக்கும் வெறுப்பான கன்டென்ட் உருவாக்குவது தான் வேலை என தெரிவித்துள்ள பிரதீப், அவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும். நானே எனக்கான கன்டென்ட்டை உருவாக்கி கொள்கிறேன். எதிலும் சிக்கி கொள்ள விரும்பவில்லை. என்னுடைய ஆதரவாளர்கள் இதை ஃப்ரியா விடுங்க” என தெரிவித்துள்ளார்,