டைட்டில் வின்னர் மாயா தான்…. பிக் பாஸ் வீட்டில் இது தான் நடக்குது…. உள்ளே நடந்ததை போட்டுடைத்த விசித்தரா…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 97 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. இந்நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நடிகை விசித்ரா எலிமினேஷன் செய்யப்பட்டிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் நடிகை விசித்ரா வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அதில் பிக் பாஸ் வீட்டில் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது பற்றியும் ஓபன் ஆக பேசியுள்ளார். நடிகை விசித்ரா வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

நடிகை விசித்ரா இதுவரை எந்த சீசனிலும் எந்த போட்டியாளரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய ஆறு சீசன்களிலும் வயதில் மூத்த போட்டியாளர்கள் தான் முதலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது. ஒரு சில சீசனில் மூத்த போட்டியாளர்கள் முதல் வாரத்தின் தப்பினாலும் கூட சில வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் விசித்ரா சிறப்பாக டாஸ்கை முடித்து 95 நாட்களை பிக் பாஸ் வீட்டில் கழித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் விசித்ராவுக்கு அதிகமான ஆதரவும் காணப்பட்டது. பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் விசித்திரா இறுதிவரை சென்று டைட்டில் வின் பண்ணுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் தெரிவித்து வந்தனர். ஆனால் கடந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உடைக்கும் வகையில் விசித்ரா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இது ரசிகர்களை மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனிடையே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆதரவளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “எனக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி! நான் இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பேன் என்று எல்லாம் கொஞ்சம் கூட நினைக்கவில்லை .. நான் இத்தனை நாட்களாக உள்ளே இருந்ததே பெரிய வெற்றி தான் என்று நினைக்கிறேன். நீங்கள் கொடுத்த ஆதரவை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அதேபோல், நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் கூட என்னை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது unfair என்றெல்லாம் தெரிவித்திருந்தார்கள்.

இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நான் இடம் பிடித்துள்ளேன் என்பதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ..எனக்கு இதுவே போதும் ” என்று நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “நான் வெளியே வந்ததுக்கு அப்புறம் என்கிட்ட நிறைய பேர் கேட்கிற கேள்வி “யார் இந்த சீசன் டைட்டில் வின் பண்ணுவாங்க என்றுதான் ” ..இந்த கேள்விக்கு எல்லாரும் அர்ச்சனா என்று தான் பதில் சொல்கிறார்கள்.

ஆனா என்ன பொறுத்த வரைக்கும் மாயா வின் பண்ணுனா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து எல்லாம் கிடையாது பிக் பாஸ்க்கு வீட்டுக்குள் இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் நான் இதை சொல்றேன். அதாவது பிக் பாஸ் வீட்டில் மாயா வெளிய கெட்ட பெயர் வாங்கினாலும் பரவாயில்லைன்னு மக்களை சந்தோச படுத்தினா போதும்னு விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஆனா அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள்ள வரும்போது நல்ல ஒர்க்அவுட் பண்ணிட்டு வந்திருக்காங்க. பிரதீப் விஷயத்துல உரிமை குரல் கொடுத்ததால் தான் அர்ச்சனாவுக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது. ஒருவேளை பிரதீப் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்திருந்தா இந்த முறை டைட்டில் வின்னர் கான போட்டியில் பெரிய சேஞ்ச் இருந்திருக்கும். ஆனா இப்போ சீசன் டைட்டில் வின்னர் ஆவதற்கான வாய்ப்பு மாயாவுக்கும் அர்ச்சனாவுக்கும் தான் இருக்கிறது.

மாயாவை எடுத்துக் கொண்டால் மாயா நெகட்டிவா காட்டி பிக் பாஸ் ஐ நல்லபடியா கொண்டு போறாங்க. ஆனா அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் வரும்போது நல்லா ரெடியாகி வந்திருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி பிக் பாஸ் வீட்டுக்குள்ள கேம் விளையாடுறாங்க.அது எப்படின்னு என்னால இப்போ சொல்ல முடியாது ..அர்ச்சனா மாயா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தவங்க தான் பின்னர் ரன்னரா வர போறாங்க என்று வீடியோவில் விசித்ரா ஓப்பனாக பேசியிருந்தார்.