விசித்ரா கேட்ட ஒரே கேள்வி… திக்குமுக்காடி போன கமலஹாசன்… சபாஷ் விசித்ரா..

0
Follow on Google News

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்குநாள் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து அவரை போட்டியில் தொடர விடாமல் வீட்டை விட்டு வெளியேற்றியதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து சமூகவலைதள பக்கங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த நவம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் நடிகை விசித்ரா பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது குறித்து கமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை கமல் கூறியிருந்தார். இது இப்போது பிக்பாஸ் ரசிகர்கள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படி விசித்த்ரா என்ன கேட்டார், அதற்கு கமல் என்ன பதில் அளித்தார் என்பதை இங்கே பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாளுக்காக எப்போதுமே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை நடந்த திடீர் ரெட் கார்ட் பிரச்சனையால் இந்த வார சனிக்கிழமை எபிசொட்டில் கமல் என்ன பேசப்போகிறார் என்று ரசிகர்கள் ஒருவாரமாக காத்திருந்தனர். இதற்கிடையில், நவம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை எபிசோடில், “பெண்களுக்கு பிரச்சனை என்றதும் ரெட் கார்ட் கொடுத்த நீங்கள் ஒரு வாரமாக சில பெண்களால் எங்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு தண்டனை கிடையாதா?” என்று நடிகை விசித்ரா கமலிடம் கேள்வி கேட்டிருந்தார்.

நடிகை விசித்ராவின் இந்த கேள்விக்கு கமல் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் அடுத்த நாள் எபிசோடுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். பிக் பாஸ் வீட்டில் புல்லீ கேங் செய்யும் அட்டூழியங்களால் போட்டியாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போது அந்த புல்லி கேங்குக்கு எதிராக நடிகை விசித்ரா வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு சனிக்கிழமை எபிசோடில் நிறைய குறும்படம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை எபிசோடில் பேசிய கமல், புல்லி கேங்குக்கு எதிராக தன்னுடைய கருத்தை தெளிவாக எடுத்து வைத்திருந்தார். அதோடு தானாக ரெட் கார்ட் பிரதீப்புக்கு கொடுக்கவில்லை என்றும், புல்லி கேங் போட்டியாளர்கள் சொன்ன குற்ற சாட்டுகளாலும் அதை சொன்ன முறையாலும் தான் நான் ரெட் கார்டு கொடுத்தேன் என்று கமல் விளக்கம் கொடுத்திருந்தார்.

மேலும், “போனவாரம் சில பெண்களுக்கு ஒரு ஆணால் பிரச்சனை என்று சொன்னதும் ரெட் கார்ட் கொடுத்தீங்க. ஆனால் ஒரு வாரமாக சில பெண்களால் எங்களுக்கு பிரச்சினையாக இருந்தது அப்போ அவங்களுக்கு தண்டனை கிடையாதா” என்று விசித்ரா கேட்ட கேள்விக்கு, “ஏன் தண்டனை கிடையாது இங்கே அதிகமான ரெட் கார்ட் இருக்கிறது” என்று பதில் அளித்திருக்கிறார்.

கமல்ஹாசனின் இந்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பேசிய கமல், பிரதீப் உங்களிடம் ஆரம்பத்தில் தவறாக நடந்து கொண்டது உண்மை தானே? அவர் தவறாக பேசியது தப்பு தானே? என்று விசித்ராவிடம் கேள்வி கேட்டார். எப்படியானாலும், விசித்ராவின் கேள்விக்கு கமல் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கமல் புல்லீ கேங்குக்கு எதிராக தண்டனை கொடுக்காமல் இருந்தது அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்தது. ஒரு வாரமாக கூட்டமாக சேர்ந்து விசித்ரா மற்றும் அர்ச்சனாவை புல்லி கேங் பல பிரச்சனைகள் கொடுத்ததற்கு கமல் ஏன் தண்டனை கொடுக்கவில்லை என்றும் பலர் கமென்ட் செய்து வருகின்றனர்.