பெண் தோழியுடன் பிக் பாஸில் பங்கேற்கும் TTF வாசன்… உள்ளே என்னெல்லாம் நடக்க போகுதோ.?

0
Follow on Google News

தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன் களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது. ‌ பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக இந்த சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.

தற்போது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், அடுத்தது யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி தான் சோசியல் மீடியாவில் எழுந்து வந்தது. இதில் நயன்தாரா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றது. இறுதியில் நயந்தாரா – விஜய் சேதுபதி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இருவரும் மிக பெரிய தொகை சம்பளமாக கேட்டு வருவதாக தகவல் வந்தது.

இந்நிலையில் தற்போது இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது, அவரை வைத்து விரைவில் ப்ரோமோ சூட்டும் நடைபெற இருக்கிறதாம். எனவே, வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் பலர் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பும் இப்படித்தான் உத்தேச பட்டியல் வெளியாகும். அதில் இருப்பவர்கள் பலர் அந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போதைய சீசனின் உத்தேச பட்டியலில் வெளியானவர்களின் முதலிடத்தில் இருப்பது நடிகர் அருண் பிரசாத். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மேலும் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலி ஷாலின் ஸோயா ஆகிய இருவரையும் போட்டியாளர்களாக கலந்துகொள்ள விஜய் தொலைக்காட்சி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிஎஃப் வாசனின் காதலியான ஷாலின் ஸோயா விஜய் தொலைககாட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இவர்களை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியாக நடித்த நடிகை ஃபரீனா பெயர் இருக்கிறது. அடுத்ததாக விஜய் டிவி தொகுப்பாளர்களில் ஒருவரான மாகாபா இந்த முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதுபோல கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ராமருடைய பெயரும் இருக்கிறது.

இவரைத் தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் பாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் “காத்து மேல” பாடல் மூலம் அதிகம் கவனம் பெற்ற பால் டப்பா மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் இருப்பதாக இருக்கிறது. இறுதியாக சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக இளம் ரசிகர்களை கவர்ந்து வரும் அமலா ஷாஜி பெயரும் இருக்கிறது. பொதுவாக பிக் பாஸில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லுவார்கள் பிக் பாஸில் இந்த லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.