ஜாக்லின் முகத்திரையை கிழித்த சௌந்தர்யா… பிக் பாஸ் வீட்டில் தனித்து விடப்பட்ட ஜாக்லின்..

0
Follow on Google News

ஜாக்லின் உண்மையாக இல்லை என்பது தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கு தெரிய வந்து கொண்டிருக்கிறது. பெண்கள் அணியில் உள்ள பலருக்கும் ஜாக்லின் கன்டென்ட்காக விளையாடுகிறார் என்று நேரடியாகவே சுனிதா உட்பட பல பெண்கள் பேச தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் சௌந்தர்யா தர்ஷிதாவிடம் ஜாக்குலின் கண்டன்டுக்காக விளையாடுகிறார் என்று தெரிவிக்கிறார்.

இதை தர்ஷிதா ஜாக்குலினிடம் போட்டு விடுகிறார், ஆனால் தர்ஷிதா என்ன சொல்ல வருகிறார் என்பதே ஜாக்லீனுக்கு புரியவில்லை, அதனால் தர்ஷிதா பேசுவதை பெரிதாக ஜாக்குலின் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சௌந்தர்யாவுக்கு ஒரு சின்ன சந்தேகம், தர்ஷிதா எப்படியும் நாம் பேசுனத ஜாக்லினிடம் தெரிவித்து இருப்பார், ஆதனால் நாமே ஜாக்லின் கிட்ட நேரடியாக பேசி விடுவோம் என்று ஜாக்லினிடம் நீ கண்டன்டுக்காக தான் இதெல்லாம் செய்கிறாயா என்று சௌந்தர்யா கேட்கிறார்.

இதனைத் தொடர்ந்து என்ன பற்றி நீ இப்படி நினைக்கலாமா.? என்று ஓவர் ஆக்டிங் செய்கிறார் ஜாக்குலின். இந்த நிலையில் சௌந்தர்யாவுக்கு ஜாக்லின் தன்னை பகடையாக பயன்படுத்துகிறார் என்று உணர்கிறார். அந்த வகையில் நான் எதற்கு உனக்கு கீழே விளையாட வேண்டும். நான் தனியாக விளையாடுகிறேன். ஒரு கேங் என்று உருவானால் கூட அது ஜாக்குலின் கேங் என்ற பெயர் வேண்டாம். சௌந்தர்யா கேங் என்று உருவாக்கட்டும் என்று துணிந்து தற்பொழுது தனது விளையாட்டை அற்புதமாக விளையாடத் தொடங்கி விட்டார் சௌந்தர்யா.

அந்த வகையில் சௌந்தர்யாவின் உண்மை முகம் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் வெளியே வர தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் ஜாக்களினின் தவறுகளை சுட்டிக்காட்டி நம்ம ஸ்கோர் செய்து விடுவோம் என்கின்ற ஒரு இடத்திற்கு வந்துவிட்டார் சௌந்தர்யா. ஆனால் இதை புரிந்து கொள்ளாத ஜாக்குலின் சென்டிமென்ட் ஆக சௌந்தர்யாவை கவுத்தி விடலாம் என்று பேசத் தொடங்கினார்.

ஆனால் சௌந்தர்யா ஒரே போடாக போட்டு நம்ம பிக் பாஸ் வீட்டில் வந்து உன்னுடன் கொஞ்ச நாட்கள் தான் பழகுறோம், வெளியே உன்னிடம் நான் பழகியது கூட கிடையாது. என ஓப்பனாகவே ஜாக்குலின் முகத்துக்கு நேராக சௌந்தர்யா பேசி விடுகிறார். இதை ஜாக்லின் சற்றும் எதிர்பார்க்கவில்லை, சௌந்தர்யாவை தனக்கு கீழே வைத்து பிக்பாஸில் கேம் விளையாடலாம் என்று நினைத்த ஜாக்லீனுக்கு இது ஒரு அதிர்ச்சியாக தான் இருந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்காக ஒரு கூட்டத்தை உருவாக்கி சாம்ராஜ்யத்தை நடத்தி விடலாம் என்று நினைத்த ஜாக்லினின் கனவு பாழாய் போனது என்று சொல்லும் அளவிற்கு வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்கும் தெரிந்து விட்டது ஜாக்குலின் போலியாக கேம் விளையாடுகிறார் என்று. இதனை தொடர்ந்து ஜாக்லின் உடன் இணைந்தால் நம்மளையும் மக்களை வெறுத்து விடுவார்கள் என்று ஜாக்கிலினை விட்டு ஒவ்வொரு போட்டியாளர்களும் துஷ்டனை கண்டால் தூர விலகு என்று சொல்வது போல் விலகி வருவதை பார்க்க முடிகிறது.

அதே நேரத்தில் ஜாக்குலினை விட அருமையாக கேம் விளையாடைக்குரியவர் சௌந்தர்யா என்று நிரூபித்து விட்டார், அதாவது ஒரு தவறை பட்டு பட்டு என்று சுட்டிக்காட்டி எதிர்த்து சண்டையிட்டோம் என்றால் நம்மளுக்கு மக்கள் ஆதரவு பெரிய அளவில் கிடைத்து வெற்றி பெற்று விடலாம் என்று ஜாக்களின் கூடவே இருந்து ஜாக்குலின் பற்றி நன்கு தெரிந்த பின்பு ஜாக்கிலினை எதிர்த்து கேம் விளையாட தொடங்கி விட்டார் சௌந்தர்யா. இந்நிலையில் ஜாக்லின் – சௌந்தர்யா இருவர் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here