பிக் பாஸ் வீட்டில் நயன்தாரா என்ட்ரி… ஒரு மணி நேரத்திற்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.?

0
Follow on Google News

கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை, இந்த சீசன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் என்ன தான் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாலும் கூட, உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் பெருசா ஏதும் கன்டென்ட் இல்லாத காரணத்தில் நிகழ்ச்சி ரெம்பவே போர் அடிக்க ஆரம்பித்துள்ளது. இப்படியே போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை இழுத்து முடி விட வேண்டியது தான் என்பதால் தெலுங்கு பிக் பார்முலாவை கையில் எடுத்துள்ளது தமிழ் பிக் பாஸ்.

தெலுங்கு பிக் பாஸ் சீசன் ஒன்று நிகழ்ச்சியை முதன் முதலில் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு ஞானி அதனை தொடர்ந்து நாகார்ஜுனா தொகுத்து வழங்கி தற்பொழுது தொடர்ந்து சீசன் 8 வரையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் நாகர்ஜுனா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக வெற்றிகரமாக நடத்தி வந்த நிலையில் இடையில் ஒரு சீசன் அவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும்போது சினிமா படப்பிடிப்பு தளத்தில் பிஸியாக இருந்தார்.

அப்போது அவர் கட்டாயம் அந்த படப்பிடிப்பு கலந்து கொள்ள வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது, இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா பதில் யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்கின்ற ஒரு பரபரப்பு நீடித்து வந்தது. அந்த வகையில் ஒரு நாள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அப்போது தன்னுடைய மருமகளாக இருந்த நடிகை சமந்தாவை அனுப்பி வைத்தார் நாகார்ஜுனா.

இந்த நிலையில் சமந்தா பிக் பாஸ் தெலுங்கு சீசனை அந்த ஒரு நாள் தொகுத்து வழங்கியதற்கு நிகழ்ச்சி பிச்சுகிட்டு டிஆர்பி ரேட்டி எங்கேயோ ஓடிப்போனது. அதே நேரத்தில் சமந்தாவும் மிக சிறப்பாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருப்பார். அதாவது நாகார்ஜுனா தொகுத்து வழங்கியதை விட சமந்தா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு டிஆர்பி மிகப்பெரிய உச்சத்தை தொட்டது.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சமந்தா தொகுத்து வழங்கிய அந்த ஒரு நிகழ்ச்சியின் டிஆர்பியை இதுவரை தெலுங்கு பிக் பாஸ் எந்த ஒரு நிகழ்ச்சியும் முறியடிக்க விடவில்லை என்றால் பாருங்கள். அந்த நேரத்தில் சமந்தா சினிமா தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய டாப்பில் இருந்தார், நாகசந்தையாவின் மனைவி நாகார்ஜுனா வீட்டு மருமகள் இப்படி பல கோணங்களில் இருந்த சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்றதுமே தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தி அந்த நிகழ்ச்சியை பலரும் பார்த்தனர்.

அதேபோன்று சமந்தா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது பலரும் நாகர்ஜுனா உங்கள் மருமகளே தொகுத்து வழங்கட்டும் நீங்கள் ஓய்வெடுங்கள் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எப்படி தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சமந்தா என்ட்ரி கொடுத்ததும் மிகப்பெரிய உச்சத்திற்கு டிஆர்பி சென்றதோ அதேபோன்று தற்பொழுது சீசன் தமிழ் பிக் பாஸ் சீசன் 8 மிகவும் மந்தமாக சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களை கவர்வதற்காக நடிகை நயன்தாராவிடம் பிக் பாஸ் தயாரிப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நயன்தாராவை ஒரு நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக அனுப்புவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா இரண்டு மணி நேரம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை மத்தியில் உரையாடிவிட்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆனால் அதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நடிகை திரிஷாவிடமும் பிக் பாஸ் தயாரிப்பு குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் திரிஷாவும் தரப்பிலிருந்து இதற்கு சம்மதம் தெறிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் தரப்பிலிருந்து நயன்தாரா , திரிஷா இருவரிடமும் அதிக சம்பளம் பேசப்பட்டால், ஒருவேளை நயன்தாரா திரிஷா இருவரில் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த படாத பாடு பட்டு வருகிற பிக் குழுவினருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்ல என்ன டிப்ஸ் கொடுக்கலாம் என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here