ஒரே பெட்ல பல பெண்களுடன் சரவணன்… நீங்களா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு உரிமை குரல் கொடுத்தீங்க..

0
Follow on Google News

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி தொடக்கம் முதலே இது தொலைக்காட்சி நிகழ்ச்சியா.? இல்லை பலான படம் ஓடும் திரையரங்கமா? என்று விமர்சனம் எழும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் குடுமபத்துடன் பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் இது போன்ற காட்சிகள் தானாக நடக்கிறதா அல்லது TRP ரேட்டிங்காக தொலைக்காட்சி நிறுவனமே ஸ்கிரிப்ட் தயார் செய்து உள்ளே இருபவர்களை நடிக்க வைக்கிறதா என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நிக்சன் , ஐசு விடம் வரம்பு மீறி நடந்து வந்தது, அதே போன்று விஷ்ணு தான் பாத்ரூமில் தாழ்ப்பாள் போடாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி மாயாவிடம் புலம்பு காட்சி என, மக்கள் கழுவி கழுவி ஊத்தும் அளவுக்கு படு கேவலமான காட்சிகள் இடம்பெற்றுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து கமல் வெளியேற்றியது மிக பெரிய எதிர்ப்பை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெற்று தந்தது.

இந்நிலையில் பிரதீப்பிடம் பாதுகாப்பு இல்லை என்று கூறிய நிலையில், தற்போது சரவணன் உடன் மாயா, பூர்ணிமா மற்றும் அக்சயா ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து தூங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப்க்கு தவறான குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு ரெட் கார்ட் வழங்க காரணமாக இருந்த இருவரும் தற்போது செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

இந்நிலையில், ஒரு ஆணுடன் 3 பெண்கள் தூங்கும் காட்சி பார்ப்போரை அறுவெறுக்க செய்கிறது. மேலும், இதை பார்த்த ரசிகர்களும் தமது வெறுப்பை கொட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து இருந்த காட்சி பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. சரவணன் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள்.

ஆனால், நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இப்போது வரை சரவணன் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை. எந்த போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் கூட அதில் அவர் ஈடுபடவும் இல்லை, கமெண்ட்ஸ் சொல்வதும் இல்லை. அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடுகிறார்.

இதனாலே பிக் பாஸ் ரசிகர்கள் இவரை கிண்டலடித்து விமர்சித்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் மாயா & கோ டீமில் சேர்ந்துகொண்டு அர்ச்சனாவை எல்லாம் கேள்வி கேட்டார். தற்போது சரவணன், பூர்ணிமா பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சரவணன் பூர்ணிமா பெட்டில் படுத்து இருக்கும் போது பக்கத்தில் சரவணன் நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது சரவணன் பூர்ணிமாவிடம் எனக்கு உன்னை ஏற்கனவே ரொம்ப பிடிக்கும். ஆனால் அன்னைக்கு நீ என்ன கட்டி பிடிச்ச போது எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டு என்று சொல்ல, அதற்கு பூர்ணிமா என்ன மூட் ஆகிட்டா என்று கூலாக கேட்கிறார். அதற்கு சரவணன் அப்படி எப்படின்னு என்னால சொல்ல முடியல, ஆனா ஒரு மாதிரி இருந்து. ஏற்கனவே உன்னை பிடிக்கும்.

ஆனாலும் அதையெல்லாம் மனசுக்குள்ள மறைச்சு வச்சுட்டு தான், நான் அங்கே இங்கே சாப்பிட்டுவிட்டு அப்படி இப்படி நடந்துக்கிட்டே இருந்தேன். ஆனால் நீயா வந்து என்னை கட்டிப்பிடித்த போது எனக்குள் வந்த ஃபீலிங்கை சொல்ல முடியல என்று பேசி இருக்கிறார்.அதுமட்டுமின்றி ஏற்கனவே சரவணன் கேமரா முன்பு நின்று கொண்டு நான் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று பேசிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடதக்கது.