பிரதீப் விசயத்தில் இது தான் நடந்தது… பிக் பாஸ் உள்ளே நடததை போட்டு உடைத்த அக்சயா…

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 சுவாரஸ்யமாக சென்றுகொண்டு இருக்கின்றது. நாளுக்கு நாள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கும் இந்த சீசனில் சண்டைகளும் சர்ச்சைகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. மற்ற சீசன்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்றபோட்டியாளராக ஒருவர் கண்டிப்பாக இருப்பார். ஆனால் இந்த சீசனில் அப்படி ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிரதீப் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

இதனால் பிக் பாஸ் மீதும் கமல் மீதும் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் பிரதீப் ரெட் கார்டு வாங்கிவிட்டு வெளியேறிய பிறகு இந்த சீசனில் அதிகளவில் வேறெந்த போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு வழங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மாயா மற்றும் பூர்ணிமா அதிகளவில் விமர்சிக்கப்பட்டாலும் பேராதரவை பெரும் போட்டியாளராக யாரும் இல்லை. எனவே இந்த சீசனில் கண்டிப்பாக இவர் இறுதிப்போட்டிக்கு செல்வார் என யாராலும் உறுதியாக சொல்லமுடியவில்லை.

ஒரு வாரம் அவர்கள் ரசிகர்களின் ஆதரவை பெற்றால் அடுத்த வாரம் அவர்களின் செயல் ஏதேனும் ரசிகர்களால் விமர்சனத்திற்கு உண்டாகி வருகின்றது. அந்த அளவிற்கு இந்த சீசன் கணிக்கமுடியாத அளவிற்கு சென்றுகொண்டு இருக்கின்றது. மேலும் வாரம் வாரம் ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேறுவதும் நடந்து வருகிறது. ஆனால் கடந்த வாரம் பிராவோ, அக்ஷயா என்று இருவர் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அவர்களுக்கு பதில் அனன்யா, விஜய் வீட்டுக்குள் சென்றனர்.

இவர்கள் வீட்டுக்குள் சென்றதால் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பிக் பாஸ் வீடு எப்பவும் போன்றுதான் செயல்பட்டு வருகிறது. ஆனால் வெளியே வந்த அக்ஷயா பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷயா, வீட்டில் நடந்த சில விஷயங்களை பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். இதில் பிரதீப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

பிரதீப் பெண்களின் பாதுகாப்பு கருதி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இன்று வரை அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப் பட்டுத்தான் வருகின்றன. அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவீனா சொன்ன அந்த அரைஞான் கயிறு மேட்டர்தான். ஆனால் அதை பற்றி ரவீனா கமலிடம் தெளிவாக சொல்லும் போது பீப் கொடுத்து ஆஃப் செய்து விட்டனர். அதனால் பிரதீப் சொன்ன அந்த வார்த்தை என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது

இந்த நிலையில் அக்‌ஷயாவை பேட்டி எடுத்த தொகுப்பாளினி இதை பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் அக்‌ஷயா அதை ஆஃப் கேமிரா முன் தான் சொன்னாராம். பிரதீப் ரவீனாவிடம் சொன்னது பெரிய வார்த்தையாம். அதை சொன்ன பிறகுதான் அதை வைத்தே வீட்டில் இருந்தவர்கள் ஆலோசித்து ரெட் கார்ட் கொடுக்க முன்வந்தார்களாம். அது ஏன் சொன்னார்? எதுக்காக சொன்னார் என்பதை ரவீனா வெளியே வந்தால்தான் தெரியும் என கூறுகிறார்கள்.

மேலும் பேசிய அக்ஷயா, “நான் கவலையாக இருக்கும்போது பிரதீப் தான் எனக்கு ஆறுதல் கூறுவார். அப்போது அவர் எனக்கு தவறாக தெரியவில்லை. கூல் சுரேஷுக்கும் பிரதீப்புக்கும் சண்டை வந்த போது நான் பிரதீப்புக்கு துணையாக தான் இருந்தேன். அந்த சண்டைக்காக ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று நான் யோசித்ததே இல்லை. ஆனால் பிரதீப் ரவீனாவிடம் நடந்து கொண்டதை கேள்விப்பட்ட போது எனக்கு மிகவும் பக் என்று இருந்தது. எனக்கு நடக்கவில்லை என்றாலும், வேறு ஒருவருக்கு நடக்கும் போது அதை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

அதே சமயம் நான் வெளியே வந்து பார்த்தபோது ரவீனா பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், உள்ளே அது தெரியவில்லை. பாத்ரூம் விசயம் வேறு ஒடியது, அது எனக்கு தவறாக பட்டது. அதனால் கமல் சார் கேட்கும் போது, ‘வீட்டில் நடந்தாலும், வெளியில் நடந்தாலும் இது தவறு தான்; அப்படி நடந்திருந்தால் ரெட் கார்டு கொடுங்க சார்’ என்று தான் நான் கார்டு தூக்கினேன்.” என்று பேசியுள்ளார்.