பிக் பாஸ் பூர்ணிமாவுக்கு – விஷ்ணுக்கு இருக்கும் உறவு பற்றி மனம் திறந்த பூர்ணிமா அப்பா… இப்படி ஒரு தந்தையா.?

0
Follow on Google News

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7வது சீசன் பொருத்தவரையில் ஜோடிகளின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது. ஆண் பெண் ஜோடியை கடந்து பெண் – பெண் ஜோடியே இந்த சீசனில் இருக்கிறது என்றால் அதை சந்தேகிக்க முடியாது. முன்னதாக வீட்டில் ஜோடியாக அலைந்து திரிந்து கொண்டிருந்த நிக்ஸன் மற்றும் ஐஷுவின் கூட்டணி ஐஷுவின் எலிமினேஷனால் உடைந்தது.

வீட்டில் இன்னமும் ஜோடியாக அலைந்து திரிபவர்கள் தான் மணி மற்றும் ரவீனா. ‘செல்லோ’ என்ற வார்த்தையை கேட்டாலே இவர்களின் முகம் நினைவிற்கு வரும் அளவிற்கு அந்த வார்த்தையை பேசி பேசி பழக்கியிருக்கிறார்கள். இந்த ஜோடிக்கு அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சேர்ந்துவிடுகிறார்கள்.

இந்த சீசனில் இவர்கள் ஜோடியா இல்லையா என சந்தேகம் வரும் அளவிற்கு இருக்கும் ஜோடி தான் விஷ்ணு மற்றும் பூர்ணிமா. அவ்வப்போது மிகப்பெரிய வாக்குவாதங்களும் ஏற்பட, இருவரும் இணைந்து பேசி, சிரித்து சில காதல் கன்டன்டையும் கொடுத்திருக்கிறார்கள். மேலும் விஷ்ணுவைப் பற்றி நல்ல விதமாக பூர்ணிமா மாயாவிடம் அவ்வப்போது பேசியதும் இந்த ஜோடி ரசிகர்களுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துவிட்டது.

ஒருமுறை அர்ச்சனா மாயாவிடம் டேட் செய்யலாமா எனக் கேட்டபோது தான் பூர்ணிமாவை டேட் செய்வதாக மாயா கூறியிருந்தார். அந்த வகையில் மாயா – பூர்ணிமாவையும் ஜோடி லிஸ்டில் சேர்த்துவிடலாம் போல. பூர்ணிமா மாயா இல்லாமல் தனியாக விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வந்தனர். அதோடு பூர்ணிமா சில வாரங்களுக்கு முன்பு எலிமினேஷனில் இருந்த நேரத்தில் அந்த வாரத்தில் கண்டிப்பாக வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் உறுதியாக இருந்தனர்.

ஆனால் அந்த வாரத்தில் எலிமினேஷன் கேன்சல் செய்யப்பட்டது. இது பூர்ணிமாவுக்கு சூப்பர் ஆப்பராக அமைந்து இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சில வாரங்களாக பூர்ணிமாவின் விளையாட்டு மாற்றம் பெறுகிறது என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு பூர்ணிமாவின் கேரக்டர் இப்போது ரசிகர்களுக்கு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் பூர்ணிமா மாயாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விஷ்ணு கேங்கோடு சேர்ந்து கொண்டிருக்கிறார்.

விஷ்ணு மற்றும் பூர்ணிமாவுக்கு இடையில் நல்ல பாண்டிங் இருந்தது. இருவரும் கோபமாக சண்டை போட்டுக் கொண்டாலும், சிறிது நேரம் கழித்து சேர்ந்து விடுவார்கள். இதனால் விஷ்ணுவை பூர்ணிமா காதலிக்கிறாரா என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பூர்ணிமாவின் பெற்றோர் பேட்டி ஒன்றில் பூர்ணிமாவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அவர்களிடம் பூர்ணிமாவிற்க்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதை நீங்கள் என்ன நினைக்கிறீங்க என்று கேள்வி அதற்கு பூர்ணிமாவின் அப்பா அதை நாம எப்படி சொல்ல முடியும். பூர்ணமா மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை பூர்ணிமா சொன்னாதான் நமக்கு தெரிய வரும். பூர்ணிமா எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வந்து விடுவார். ஏனென்றால் இன்னும் கிட்டத்தட்ட 23 நாட்கள் தான் இருக்கிறது.

அதற்குப் பிறகு பூர்ணிமாவே இது பற்றி பேசட்டும். பூர்ணிமா மனசில் உண்மையில் என்ன இருந்தாலும் எங்களுக்கு ஓகே தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். வெளி உலக தொடர்பே இல்லாமல் ஒரு வீட்டில் இருக்கும்போது உருவாகும் இந்த காதல், வெளியே சென்ற பிறகும் தொடர்ந்தால் அது நல்ல விஷயம் தான். விஷ்ணு-பூர்ணிமாவின் காதல் நிலைக்குமா இல்லை நாங்கள் காதலர்கள் எல்லாம் இல்லை ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் தான் என்று சொல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.