ஐஸுவை எல்லாம் பழிவாங்கிட்டாங்க …. கண்கலங்கி கதறும் நிக்சன்…

0
Follow on Google News

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் குற்றம்சாட்டியதன் அடிப்படையில் ரெட் கார்டு வழங்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். மேலும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக ஐந்து பேர் அதிரடியாக உள்ளே என்ட்ரி கொடுக்க ஏற்கனவே இருந்த போட்டியாளர்கள் ஆட்டம் கண்டனர். முதல் நாளே வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த அனைவரும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட எதற்கு எடுத்தாலும் சண்டை வெடித்தது.

கன்டென்ட் என்ற பெயரில் மாயா குழுவும் அர்ச்சனா குழுவும் மாறி மாறி போட்ட சண்டைகள் அனைத்தும் இரைச்சலாகவே இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐஷு வெளியேற்றப்பட்டார். வாக்கு அடிப்படையில் கடைசி இடத்தில் பூர்ணிமா இருந்ததால் அவர்தான் வெளியேற்ற படுவார் என்ற பலர் நினைத்த நிலையில் திடீரென ஐசு வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதுமட்டுமின்றி வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் இது மிகப்பெரிய பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவர்கள் அனைவரும் ஸ்கெட்ச் போட்டது வயதான போட்டியாளர் விசித்ராவை தான். ஆனால் வெளியேறியது ஐஷு. பூர்ணிமா ரவியையும் மாயாவையும் பிரிப்பதை விட ஐஷுவையும் நிக்சனையும் பிரிப்பதே நல்லது என்கிற முடிவுக்கு பிக் பாஸ் டீம் வந்திருக்கிறது தெளிவாக தெரிந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த நடன இயக்குனர் அமீரின் வளர்ப்பு குடும்பத்தை சேர்ந்தவர் தான் ஐஷு. இவரும் சிறந்த நடன கலைஞராக இருந்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த ஐஷு ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்தார். போகப்போக கேட்பாரின் பேச்சை கேட்டு சில சர்ச்சைகளில் சிக்கினார்.சக போட்டியாளரான நிக்சன் உடன் ஐஷு பழகி வந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

குறிப்பாக கண்ணாடி வழியே முத்தங்களை பரிமாறிய கன்டென்ட் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தங்களுடைய குடும்ப மானத்தை வாங்கி வரும் ஐஷுவை வெளியே அனுப்பி விடுங்கள் என ஐஷுவின் பெற்றோர் பிக் பாஸ் செட்டுக்கே சென்று கொந்தளித்த தகவல் இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ஐசு இந்த வாரம் அவர் வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் டார்ச்சர் செய்து வெளியே அனுப்பி விட்டார்கள் என நிக்சன் கதறுவதை பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் நிக்சனுடன் சேர்ந்ததால் தான் ஐஷு வெளியே சென்றார். அதுமட்டுமின்றி தானும் ஐசுவும் பேசும் பொழுது ஐசு அனைவரும் என்ன கூறி விடுவார்களோ என்ற பயத்திலேயே பேசுவதாகவும் கூறினார்.

இந்நிலையில் அசல் கோலாரே பரவாயில்லை என்கிற அளவுக்கு நிக்சன் வேட்டி கட்டி விடுவது, கன்னத்தை பிடித்து தடவுவது, காலை பிடித்து இழுப்பது, கூந்தல் முடி சீவி விடுவது என ஐஷுவை சுத்தி சுத்தி வந்த நிக்சன் ஐசு இல்லாமல் தற்பொழுது பரிதவித்து வருகிறார். இந்நிலையில் ஐஷுவை பிரிந்து இனிமேல் நிக்சன் என்ன செய்வார் என்றும், அவரையும் அடுத்த வாரம் அனுப்பி விடுங்க பிக் பாஸ், பாவம் நிக்சன் என ரசிகர்கள் கிண்டல் செய்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.