மாயா அவருடன் உறவில் இருந்தார்…எனக்கு தெரியும்… போட்டுடைத்த பிரபல பாடகி..

0
Follow on Google News

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 37 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இதற்கு முழு காரணம் மாயா என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மாயா, தான் பெரியவள் என்றும், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும் திமிராக நடந்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள பல போட்டியாளர்களுடன் சண்டை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தனக்கென்று ஒரு கேங் ஃபார்ம் செய்து கொண்டு பிற போட்டியாளர்களை வம்பிழுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா, மாயா குறித்த ஒரு ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில், ‘’பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் சினிமா சார்ந்த தொழிலில் இருப்பவர்கள். அதிலும் மாயா ஒரு லெஸ்பியன். இயக்குநர் கவுதம் மேனனின் உதவியாளப் பெண் ஒருவருடன் வாழ்ந்திருக்கிறார். அவரும் லெஸ்பியன் தான்.

மாயா பெண்களுக்கான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குழு ஒன்றை உருவாக்க நிதி திரட்டியபோது, தனது முன்னாள் கணவர் கூட நிதி திரட்டி ஆதரவு கொடுத்துள்ளார். ஆனால் அது என்ன ஆனது என்று தெரியவில்லை. இப்படி பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் மாயா. அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. மாயா, பூர்ணிமாவை கவர் பண்ண பார்க்கிறார்.

மாயா குடிக்கிற தண்ணீரில் பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படிப்பட்ட ரொம்ப மோசமான பொண்ணு தான் அவள். ஐஸுவின் பெற்றோர், ஐஸுவின் செயல்பாட்டினால் கஷ்டத்தில் இருக்கின்றனர்’’ என்றார்.
மாயா ஒரு லெஸ்லியன் என சுசித்ரா சொன்ன மறுதினமே மாயா, ஐஷூவுடன் ஒரே பாத்ரூமுக்குள் சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

மாயாவும், ஐஷூவும் பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் ஒன்றாக உள்ளே சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. பிக்பாஸ் விதிப்படி போட்டியாளர்கள் கலந்துரையாடும்போது மைக்கை கட்டாயம் மாட்டி இருக்க வேண்டும். பாத்ரூமுக்கு செல்லும் போது மட்டும் மைக்கை கழட்டிவைத்துக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி இருவரும் மைக்கை கழட்டிவைத்துவிட்டு ஒன்றாக ஒரே பாத்ரூமுக்குள் சென்று சிலவற்றை பேசி இருப்பார்கள் போல தெரிகிறது.

இப்படி ஒரு நிலையில் சுசித்ராவின் இந்த விமர்சனம் குறித்து பாடகியும் மாயாவின் நெருங்கிய தோழியுமான ஸ்வாகதா கிருஷ்ணன் இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது ‘சுசித்ராவின் சமீபத்திய நேர்காணலில் அவர் மாயா பற்றிய மோசமான அவதூறுகளை முன் வைத்தது கண்டிக்கத்தக்கது.

மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும் மற்றும் Lgbtq+ வாழ்க்கை சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர் என ஸ்வாகதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாயா மீது இது போல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதன்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.