கமல்ஹாசனை கதற விடும் பிக் பாஸ் மாயா.. ஆண்டவர் மீது கொஞ்சம் கூட பயமே இல்லை…

0
Follow on Google News

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல், பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, விக்ரம்,அக்ஷயா, நிக்சன் ஆகியோர் வீட்டிற்குள் ஒரு டீமாக செயல்பட்டு வருகின்றனர். ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும், தினேஷ், அர்ச்சனா, விசித்ரா ஆகியோர் பிரச்சனைகளுக்காக ஒன்று கூடினாலும், தங்களுடைய தனித்துவமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அதே போல் விஷ்ணு, ரவீனா, மணிச்சந்திரா, கானா பாலா, பிராவோ ஆகியோர் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகாவை கையில் வைத்துக்கொண்டு அழகாக காய்களை நகர்த்தி வருகிறார். இதையடுத்து, கடந்த வாரம், பிரதீப்பிற்கு எதிராக உரிமை எழுப்பி, பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவரை வெளியேற்றினார்கள்.

பிரதீப் வெளியேற்றப்பட்டது சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி வருகிறது. இந்நிலையில் தலைவராக இருக்கும் மாயா டீம் வார இறுதியில் தவறுகள் குறித்து கமல் சார் கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற பிளான் போட்டு வருகின்றனர். மேலும் அப்போது மாயா கூறுவது, “நாம் தவறுகள் செய்து கொண்டே இருப்போம். கமல் சார் நம்மளை திட்டட்டும். அப்போ சாரி சார் என்று சொல்லிவிடலாம். அவ்வளவுதான்” என நக்கலாக கூறியுள்ளார்.

மாயாவின் இந்த நக்கல் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமல் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் மாயாவின் பதில் இதுதானாம். இதனை தனது குழுவினருடன் அமர்ந்து முடிவு செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் மீதே தற்போது மாயா கேங்கிற்கு பயமில்லாமல் போய்விட்டது என்பது அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் பில் டாஸ்க்கில் ’நீங்கள் பில்லை கேட்கும்போதே கொடுத்திருக்க வேண்டியதுதானே, அப்போது எந்த பிரச்சனையும் வந்திருக்காதே’ என்று தினேஷ் கேள்வி எழுப்பும் போது கேப்டன் மாயா ’கமல் சாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து மாயா குரூப் தனியாக ஆலோசனை செய்யும் போது ’நம்ம சைடும் நிறைய தப்பு இருக்குது, கண்டிப்பா கமல் சார் கேட்பார்’ என்று மாயா கூறினார்.

அப்போது பூர்ணிமாவும் ’ஏதாவது தப்பு பண்ணிட்டு, வீக் எண்ட்ல கமல் சார் கேட்பார், கழுவி ஊத்துவார், அப்ப சாரி சார்ன்னு சொல்றதே நமக்கு வழக்கமாக போயிருச்சு’ என்று கூற மாயா சிரிக்கிறார். மொத்தத்தில் பிக் பாஸ் மீதும் பயமில்லை, கமல்ஹாசன் மீதும் பயம் இல்லை என்ற நிலை தான் தற்போது மாயா கேங்கிடம் உள்ளது என்றது தெளிவாக தெரிய வருகிறது.

இந்நிலையில் இவர்கள் கடைசியில் ஆண்டவரையை சீண்டியுள்ளது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த வகையில் இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் போன வாரம் பிரதீப் விஷயத்தில் எடுத்த முடிவு “தீர விசாரித்ததாலேயே வந்த தீர்வு இது, தீர்ப்பு அல்ல. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். இது உலக நியதி. அதுபோல குற்றம் சாட்டியவர்கள் ரொம்ப யோக்கியமா? என்ற அந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும். அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த எபிசோடு பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகமான மக்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு எபிசோடாக இருக்கிறது என்பது பலருடைய கருத்து. மேலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அர்ச்சனா தான் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அதே சமயத்தில் பூர்ணிமா, ஐஷீ மிகவும் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கின்றார்கள். இதையடுத்து இவர்களில் ஒருவர் தான் விரைவில் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது