கூல் சுரேஷ் அட்ராசிட்டிக்கு முற்று புள்ளி வைத்த கமல்… அவமானபட்டு மன்னிப்பு கேட்ட பரிதாபம்…

0
Follow on Google News

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பல பலமான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. சுமார் 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 3 பேர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கூல் சுரேஷ் அட்ராசிட்டிக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் கமல். தமிழ் படங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக காமெடியனாக நடித்து வந்தாலும் நடிகர் கூல் சுரேஷுக்கு அடையாளம் கொடுத்தது வெந்து தணிந்தது காடு படம் தான். அப்படத்தில் அவர் சிறிய வேடத்தில் கூட நடிக்காவிட்டாலும், அதற்காக தாறுமாறாக புரமோஷன் செய்தார். அதற்கு காரணம் அவர் சிம்பு மீது வைத்துள்ள அன்பு தான். சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், செய்த புரமோஷனும், வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷும் ஒரு போட்டியாளராக களமிறங்கினார். காலையில் பாட்டு போட்டால் ஜிங், ஜிங்குனு ஆடுறாங்க என விமர்சித்த கூல் சுரேஷை ஏன் பிக் பாஸ் அழைத்து வந்திருக்கிறார் என அனைவருக்கும் சந்தேகம் வந்தது. வெளியே இருந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு விமர்சிப்பது சுலபம், உள்ளே வந்து பாரு ராசா, அப்போ தான் அது எவ்வளவு கஷ்டம் என்பது புரியும் என கூல் சுரேஷுக்கு காட்ட அவரை போட்டியாளராக்கியிருப்பார் என கருதப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் காலையில் பாட்டு போட்டால் கூல் சுரேஷும் தான் ஜிங், ஜிங்குனு டான்ஸ் ஆடி வருகிறார். மேலும் தன் ஸ்டைலில் சக போட்டியாளர்களை காமெடி செய்து கொண்டிருக்கிறார். அது சில போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. இந்தாங்க கூலு, இனி எங்களை கலாய்ப்பது வேண்டாம் என சிலர் கூறியும் அவர் நிறுத்தவில்லை. கூல் சுரேஷின் இந்த செயலை கமல் ஹாசன் கவனித்துவிட்டார். இதையடுத்து கூல் சுரேஷை கண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என குறித்து வைத்துவிட்டார் ஆண்டவர்.

இந்த நிலையில், இன்றைய எபிசோடில், கூல் சுரேஷ் செய்யும் காமெடிகள் அனைத்து கடுப்பேத்தும் வகையில் இருப்பதாக கூறி சக போட்டியாளர்கள் அனைவரும் கமல்ஹாசனிடமே ஓப்பனாக கூறிவிட்டனர். அப்போது, பூர்ணிமா, நிக்சன், விசித்ரா ஆகியோர் கூல் சுரேஷ் காமெடி என்கிற பெயரில் பிறரின் மனதை புண்படுத்தும் வகையில் பேசி வருவதை சுட்டிக்காட்டினர். இதைக்கேட்ட கமல்ஹாசன், போட்டியாளர்கள் யாரும் உங்களுக்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை. எனக்கு எல்லாமே கேட்கும், நானும் உங்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் என சொல்லி கூல் சுரேஷுக்கு ஒரு வார்னிங் கொடுத்துள்ளார்.

கமல்ஹாசன் முன்னிலையில் சக போட்டியாளர்கள் தன்னைப்பற்றிய விமர்சனங்களை முன்வைத்ததை பார்த்து ஷாக் ஆன கூல் சுரேஷ், செய்வதறியாது திகைத்துப்போன காட்சி தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்தவாரம் கூல் சுரேஷ் தான் அனைவரின் டார்கெட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உருவக் கேலி குறித்த விழிப்புணர்வு தற்போது பேசப்பட்டுவரும் சூழலில், சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படி உருவத்தை வைத்து கொச்சையாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் சிரிக்கவைக்க எத்தனையோ வழிகள் இருக்க, காமெடி என்கிற பெயரில் உருவக் கேலியில் ஈடுபடுவதை எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது. வடநாட்டில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பல விஷயங்களை இங்கு நடத்த அனுமதிப்பதில்லை என்று ஒவ்வொரு சீசனிலும் தவறாது சொல்லும் கமல், இந்த சீசனில் தொடர்ந்து கூல் சுரேஷ் செய்யும் உருவக் கேலியையும் நேற்று கண்டித்தார். அதனைத் தொடர்ந்து கூல் சுரேஷ் அனைவரின் முன் மன்னிப்பு கேட்டார்.

காமெடி என்கிற பெயரில் கண்டதையும் பேசும் கூல் சுரேஷை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து லெஃப்ட் அன்ட் ரைட் விடுவது தான் பிளான் போன்று. கமல் ஹாசனை வைத்து கூல் சுரேஷுக்கு பயத்தை காட்டிவிட்டார் பிக் பாஸ். நீங்க பெரிய ஆளு தான் பாஸ். இதற்கிடையே கூல் சுரேஷ் அடிக்கடி தமிழன்டா, தமிழன்டா என சொல்வது சுத்தமாக பிடிக்கவில்லை என பிக் பாஸிடம் தெரிவித்துள்ளனர் பார்வையாளர்கள். கமலின் கோபமான கண்களை பார்த்து கூல் சுரேஷ் கொடுத்த ரியாக்ஷன் பயங்கரம். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போன்று பாவமாக பார்த்தார்.