கமல்ஹாசன் மீது கடும் அதிருப்தி…பிக் பாஸ் தொகுப்பாளராக நீயா நானா கோபிநாத்… இது எப்படி இருக்கு.?

0
Follow on Google News

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ள கமல்ஹாசன், இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது நடைபெற்று வரும் 7-வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வந்தாலும், இதற்கு முந்தைய சீசன்களைப் போல் இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்குவதில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு முக்கிய காரணம் பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரத்தை கமல் கையாண்ட விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் வாங்கிக்கொண்டு வெளியே சென்று இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்று வரை பிக் பாஸ் வீட்டிற்குள் அவருடைய பேச்சு ஓய்ந்த பாடு இல்லை. பிரதீப் ஆண்டனிக்கு எதிராக என்ன நடந்தது என்பதை மாயாவே தன்னுடைய வாயால் சொல்லி இருக்கிறார்.

ஒரு பக்கம் மாயா கூட்டணி நீங்கள் ரெட் கார்டு கொடுத்ததால் தான் நாங்கள் எடுத்துக் காட்டினோம் என்று கமலிடம் சொல்ல, கமல் நான் காட்டினால் நீங்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டி தானே என்று பிரச்சனையை பூசி மொழுகி விட்டார். கமல் தன்னுடைய சொந்த ஈகோவிற்காகத்தான் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்தார் என்ற விமர்சனங்கள் உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

அதோடு, கடந்த வாரம் பிரதீப் விவகாரத்தை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது வினுஷா பற்றி நிக்சன் சொன்ன கொச்சையான உருவகேலி கமெண்ட் தான். இதனை வார இறுதியில் கமல் கேட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒன்று நடக்காதது போலவே அதனை அசால்டாக கடந்துவிட்டு சென்றார் கமல்

இதனால் ரசிகர்கள் இடையே கமல் மீது கடும் கோபம் உருவானது. மேலும் இந்த சோவை இனி நீங்கள் நடத்தாதீர்கள் என்ற அளவிற்கு அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த ஷோவை இனிமேல் கோபிநாத் நடத்தலாம் அவர் நியாயமானவர் என்றும் கூறி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.

பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது. அதிலும் முந்தைய நிகழ்ச்சி ஒன்றில் நடந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ’நீயா நானா’ நிகழ்ச்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற தலைப்பில் பேசிய இளம்பெண் ஒருவர் ’நீயா நானா நிகழ்ச்சியில் கொடுத்த விண்ணப்பத்தில் கூட மகன் என்றுதான் ஆப்ஷன் உள்ளது. மகள் என்று டிக் செய்ய ஆப்ஷன் இல்லை என்று கூறியிருந்தார்.

அதனை சற்றும் எதிர்பார்க்காத கோபிநாத் தன்னுடைய தவறினை உணர்ந்து அதே இடத்தில் அந்த என்னிடம் மன்னிப்பு கேட்டார். நீயா நானா கோபி நாத்தின் இந்த ஈகோவற்ற செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெருமையாக பேசப்படுகிறது. இதனை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கமலுடன் ஒப்பிட்டு கமலுக்கு ஏன் இவ்வளவு ஈகோ என்று திட்டி வருகின்றன.

ஏனெனில் பிரதீப் விஷயத்தில் அவர் மன்னிப்பு கேட்டு பிரதீப்பை உள்ளே அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் கடைசிவரை மாயாவுடன் சேர்ந்து கொண்டு பிரதீப்த்தான் தவறு என்று குற்றம் சாட்டினார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அனைவரும் கோபிநாத் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் கமல்ஹாசன் மாயாவிற்கு அதிகமாக ஜால்ரா அடிக்கிறார். அவர் தவறு செய்தாலும் தட்டி கேட்பதில்லை.

ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் லியோ படங்களில் மாயா நடித்துள்ள நிலையில், அவருக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங்? ராஜ்கமல் நிறுவனத்துக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்றே தெரியவில்லை. அடுத்தடுத்த படங்களில் அவரை கமிட் செய்திருக்கலாம். அதனால் தான் அடக்கி வாசிக்கிறாரோ என தெரியவில்லை என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் கோபிநாத் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் எப்படி இருக்கும் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.