பிக் பாஸ் நிக்சனுக்கு ஆதரவாக கமல்ஹாசன்… என்ன பொழப்பு இது… கமல்ஹாசனை கழுவி கழுவி ஊத்தும் மக்கள்…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. 60 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒன்றரை மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் தங்களை நிரூபிக்கும் கட்டத்தில் தீயாய் களமிறங்கி உள்ளனர். ஒவ்வொரு எபிசோடும், நாளுக்கு நாள் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு பஞ்சமில்லை என்ற அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக நடந்த மோதல் என்றால் அது அர்ச்சனாவிற்கும் நிக்சனுக்கும் இடையே நடந்த மோதல் தான். அப்போது நிக்சன் ‘ ஒருவரை துள்ரவன், பலியாடு என்றெல்லாம் முத்திரை குத்துவது நீங்கள் தான். நீங்கள் மற்றவர்களை மிகவும் கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். முதல் வாரத்தில் அழுது இப்போ வரை அதை செய்கிறீர்கள் என்று நிக்சன் கூறியதும் கடுப்பான அர்ச்சனா ‘ நான் முதல் வாரத்தில் செய்ததை பற்றி எல்லாம் பேசுனா நான் நிறைய விஷயம் பேச வேண்டியது இருக்கும்’ என்று பதிலடி கொடுத்தார்.

அதுமட்டுமின்றி அர்ச்சனாவை கறி துப்பி, வாடி போடி, நாயே என்றெல்லாம் பேசினார் நிக்சன். ‘ நான் கலாய்க்க ஆரம்பித்தால் 3 நாள் அலுவ, மூஞ்ச பாரு கருமம், சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன அவ்ளோ தான். நான் யாரிடமும் பேசினால் உனக்கு என்னடி, நீ கேமரா முன்னாடி யாருக்கு போய் ஐ லவ் யூ சொன்ன, எதுக்கு சொன்ன சொல்லுடி என்று கேட்டதும் ‘அது என் பெர்சனல்’ என்று அர்ச்சனா சொன்னார்.

அதற்கு நிக்சன் ‘அதே போல தான் இது என் பெர்சனல், நான் யார்கிட்ட பேசுனா உனக்கு என்ன நீ ஏன் ஐ லவ் யூ சொன்ன சொல்லு’ என்று மீண்டும் மீண்டும் அர்ச்சனாவை தரக்குறைவாக பேசி இருந்தார். ‘இனி வினுஷாவ பற்றி யாராவது பேசினால் சொருகிடுவேன் என்று கத்தினார். இதனால் கடுப்பான விஷ்ணு எங்கே சொருகு பார்க்கலாம் என்று நிக்ஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் ‘நான் உங்களை சொல்லவில்லை என்று அப்படியே அடங்கிப் போனார் நிக்சன்.

இப்படி கடுமையாக பேசிய நிக்சனுக்கு Red Card கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை எபிசோடில் கமல் ஹாசன் இதுகுறித்து பேசியுள்ளார். சொருகீருவேன்னு சொன்னீங்களே எங்க சொருகுவீங்க, வயித்துல சொருகுவீங்களா, நெஞ்சில சொருகுவீங்களா இல்ல கண்ணுலயா என வேட்டையாடு விளையாடு படத்தில் வருவது போல கண்ணை விரித்துக் காட்டினார்.

கமலின் இந்த ரியாக்‌ஷனை கண்டு அதிர்ந்து போன நிக்சன் பேசாமல் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது நீங்கள் சொருகுவதற்கு ஒரு இடம் பார்த்திருக்கேன் என்று, நிக்சனுக்கு மச்சள் நிற அட்டையை காட்டி பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன். அனைவரும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறிய நிலையில் வெறும் மஞ்சள் அட்டையை மட்டுமே காட்டியுள்ளார்

என்னடா இது பிரதீப் க்கு ஒரு நியாயம், நிக்சனுக்கு ஒரு நியாமா.? என கமல்ஹாசனை வறுத்து எடுத்து வரும் பிக் பாஸ் ரசிகர்கள். இந்த டகலட்டி வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம், நாங்க என்ன முட்டாளா.? என மக்கள் பலரும் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி உண்மையில் அவர் அதிகமாக வறுத்தெடுத்தது அர்ச்சனாவை தான். இதன் மூலம் தான் மாயா கூட்டணியில் உள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளார் கமல்ஹாசன். நான்கு வாரமாக வினுஷா மேட்டரை பேசாமல் இருந்த நிலையில் திடீரென பேசியது ஏன்? என்று அர்ச்சனாவிடம் கமல் கேட்க அதற்கு அர்ச்சனா அமைதியாக இருந்தார். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக வினுஷா மேட்டரை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

அந்த பொண்ணு நீங்களும் ரொம்ப நெருக்கமாக இருந்ததால்தான் ஐஷு வெளியே போய்விட்டார் என்று சொன்னீர்கள் இல்லையா, அவங்களும் இப்போது இல்லை உங்களுக்கு சீட்டு சேராத போது ஒரு ஜோக்கரா அவங்கள நீங்க யூஸ் பண்ணிக்க கூடாது என்று கூறிய பின்னர், ’நீங்கள் அந்த கான்வர்சேஷனில் இல்லாத போது எதுக்கு நீங்க உள்ள போறீங்க? உப்புமா நல்லா இருந்தா உப்புமாவையே சாப்பிட்டு இருந்திருக்கலாமே’ என்று கண்டித்தார்.