பவா செல்லதுரையையும் விட்டு வைக்காத ஜோவிகா… பெரிய மனுஷன் என்று கூட பார்க்காமல்…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து ஏழாவது சீசனாக வெற்றி நடை போடுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே, பஞ்சாயத்திற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களிடையே வாக்குவாதம், சண்டை என்று விறுவிறுப்பாகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும்.

இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1 முதல் தொடங்கியுள்ளது. மேலும், இந்த முறை சீசனில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் உள்ளன. இதனால் ஆடியன்ஸ் பல எதிர்பார்ப்புகளுடன் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு துறையைச் சேர்ந்த நபர்கள் போட்டியாளர்களாக அழைத்து வரப்படுவார்கள்.

இந்த சீசனிலும் அதே போலத்தான் போட்டியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, யுகேந்திரன் வாசுதேவன், ஐஸ்வர்யா, அனன்யா ராவ், வினுஷா தேவி, பூர்ணிமா ரவி, பவா செல்லதுரை, விக்ரம், நிக்சன், அக்‌ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், சரவணன், விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா என சுமார் பதினெட்டு போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்களில் பவா செல்லத்துரை என்பவர் ஒரு சிறுகதை எழுத்தாளர் மற்றும் சிறந்த கதை சொல்லியும் ஆவார். இவருக்கு வயது 61. எக்கச்சக்கமான புத்தகங்களை எழுதியுள்ள பவா செல்லதுரை பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் முதன் முதலாக சொன்ன ‘ஓட்டம்’ கதையைக் கேட்ட சக போட்டியாளர்கள் சிலர் அவர் கூறியக் கதையைக் கலாய்த்துத் தள்ளினர். குறிப்பாக, ஜோவிகா, மாயா போன்ற இளம் வயதினருக்கு வயதில் மூத்தவரான பவாவை கிண்டலடிப்பதில் அலாதிப் பிரியம் போல நடந்து கொண்டார்கள்.

ஏற்கனவே, ஜோவிகா தன்னை விட வயதில் மூத்தவரான நடிகை விசித்ராவிடம் வாயைக் கொடுத்து வம்பிழுத்துள்ள நிலையில், தற்போது பவா செல்லத் துறையையும் அசிங்கப்படுதியுள்ளார். ஜோவிகாவின் பேச்சும் சில சமயங்களில் பக்குவமானதாக இருந்தாலும், அவரது நடத்தைகள் பெரும்பாலும் சிறுபிள்ளைத் தனமாகவே இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

உதராணமாக, கல்வி அவசியமில்லை என்று அவர் பேசியதைக் கூட அவரது பக்குவமின்மைக்கு சான்றாகச் சொல்லலாம். இப்படி, பிக்பாஸ் வீட்டில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல் எல்லாம் தெரிந்தவர் போல பேசிக்கொண்டிருக்கும் ஜோவிகா நடிகை விசித்ராவை அடுத்து பவா செல்லத்துரையை பங்கம் செய்துள்ளார்.

அதாவது, பிக்பாஸ்வீட்டில் துணிச்சலாக பேசிய ஜோவிகாவை ஊக்கப்படுத்த நினைத்த பவா செல்லத் துரை, ஜோவிகாவிற்கு கை கொடுத்து சூப்பரா பேசுனம்மா என்று சொல்லியிருக்கிறார். ஆனால், பெரியவர்களுக்கு சிறிதும் மரியாதை கொடுக்க எண்ணாத ஜோவிகா, அவருக்கு கை கொடுக்காமல் அவாய்ட பண்ணியிருக்கிறார். இந்த காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ஜோவிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிலர் பவா செல்லத்துரைக்கு இதெல்லாம் தேவையா? சின்ன பிள்ளைக்கிட்ட அசிங்கப்பட்டீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.