ஆமான்டா.. நான் அப்படித்தான்…அய்யோ அதுக்கு ஜோவிகா அம்மாவே பரவாயில்லை..

0
Follow on Google News

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு அதிலும் ரியாலிட்டி ஷோக்கள் வயது வரம்பின்றி அனைத்து வயது ரசிகர்ளையும் எளிதில் கவர்ந்து விடும். சீரியல்கள் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடிக்குமோ அதே போல கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி நண்டு சிண்டு முதல் வீட்டில் இருக்கும் வயதான தாத்தா பாட்டி வரை அனைவரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது.

இந்த நிகழ்ச்சி கூடுதலாக ரசிகர்களை ஈர்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் உலகநாயகன் கமல்ஹாசன். கடந்த ஆறு சீசன்களாக மேடையில் மேஜிக் செய்த கமல்ஹாசன், இந்த பிக் பாஸ் 7வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார் என்பது கூடுதல் சிறப்பம்சம். கடந்த அக்டோபர் 1 ம் தேதி முதல் துவங்கிய பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் வஞ்சனை இல்லாமல் சண்டையும் சச்சரவுமாக சிறப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த பிக் பாஸ் 7 சீசனில் மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி விஜய் வர்மா உள்ளிட்ட 18 பேர் முதல் நாளில் என்ட்ரி கொடுத்தனர்.

முதல் வார எவிக்ஷனில் அனன்யா குறைவான வாக்குகள் பெற்றதால் வீட்டில் இருந்து வெளியேறினார். அடுத்த இரண்டாவது நாள் பவா செல்லதுரை உடல் ஒத்துழைக்காத காரணத்தாலும், மன உளைச்சல் காரணமாகவும் வீட்டில் இருந்து வெளியேறினார். அதனால் தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் ஸ்மால் பாஸ் என தனித்தனி வீடுகளில் தரமான சம்பவம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த சீசன்களில், நாமினேஷன் பற்றி பிரபலங்கள் வாய் திறக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த சீசனில்… பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை எப்படி ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்புவது என்று டார்கெட் செய்து விளையாடி வருகிறார்கள். குறிப்பாக பூர்ணிமா – மாயா இவர்கள் இருவருக்குமே எப்போதும் இதே பேச்சு தான். ஸ்மால் பாஸ் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் தான் சமையல் செய்ய வேண்டும் என்பது ரூல் என்றாலும், வீட்டை சுத்தப்படுத்தவும் , பாத்ரூம் கிளீன் பண்ணவும் இரண்டு வீட்டில் வசித்து வருபவர்களுக்கு இடையே போட்டி வைத்து தீர்மானிக்கப்படும்.

இந்த முறை… அந்த போட்டியில் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள், ஸ்மால் பாஸ் போட்டியாளர்களிடம் தோற்ற நிலையில், அந்த இரண்டு வேலையும் பிக்பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் தான் செய்து வருகிறார்கள்.
புரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மெனுவை ஒரு போர்டில் எழுதி வைக்க, அதைக்கண்டு கடுப்பாகும் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சமையல் செய்ய முடியாது என்று வேலை செய்ய மறுக்கின்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை வெடித்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் பிரதீப்புடன் இந்த சமையல் விவகாரத்தில் மல்லுகட்டுகிறார் ஜோவிகா. 6 பேர் கஷ்டப்பட்டு சமைத்துக் கொண்டிருக்கும்போது குறை கூறுகிறீர்கள் என்று பிரதீப், ஜோவிகாவிடம் கேட்க, மூன்று வேளை எவ்வளவு வேண்டுமென்றாலும் சமைக்க வேண்டும், அதுதான் உன்னுடைய வேலை என்று ஜோவிகா கூறுகிறார்.

அதற்காக அடிமை போல நடத்துவாயா என்று பிரதீப் மீண்டும் கேட்கிறார். இதனால் அவர்களிடையே சண்டை முற்றுகிறது. இதையடுத்து ஒருமையில் பேசத் துவங்குகிறார் ஜோவிகா. சரிடா, என்னுடைய சாப்பாட்டை நான் வேஸ்ட் செய்வதாகவே இருந்தாலும் சமைக்க மாட்டேன் என்று ஏன் கூறுகிறாய் என்று காட்டமாக கேட்கிறார் ஜோவிகா. சமைப்பதுதான் உன்னுடைய வேலை என்றும் அதனால்தான் இந்த வீட்டில் இருக்கிறாய் என்றும் ஜோவிகா கூற, கடுப்பானாலும் சமாளித்துக் கொண்டு கண்டென்ட் கொடுத்தீர்களா என்று பிரதீப் கேட்கிறார். அது அவருடைய பிரச்சினை இல்லை என்று தொடர்ந்து மல்லுக்கு நிற்கிறார் ஜோவிகா..