ஜோவிகா அப்பா ஆகாஷ் இல்லை அருண்… யார் அந்த அருண்.? வனிதா இரண்டாவது கணவர் ராஜன் பகீர்..

0
Follow on Google News

நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார், சீரியல் நடிகர் ஆகாஷ் என்பவரை காதலில் திருமணம் செய்து கொண்டார், இவருக்கு இது தான் முதல் திருமணம். பின்பு ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா விஜயகுமார், அதன் பின்பு ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அடுத்த சில ஆண்டுகளிலே இரண்டாவது கணவர் ராஜன் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜனை விட்டு பிரிந்தார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் முதல் கணவர் ஆகாஷை விட்டு பிரிந்த பின்பு, இரண்டாவது கணவர் ராஜனுடன் பழகுவதற்கு முன்பு, இந்த இடைப்பட்ட காலத்தில் அருண் என்கிற நபருடன் கிசு கிசுவில் சிக்கி வந்தார், ஆனால் ராஜனுடன் நெருங்கி பழகி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்பு ராஜனை விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா ராபர்ட் மாஸ்டர் உடன் கிசு கிசுவில் சிக்கினார்.

ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவரும் பொது இடங்களுக்கு ஜோடியாக வலம் வருவது, வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சொல்வது, ரியாலிட்டி ஷோக்களில் ஜோடியாக கலந்து கொள்வதுமாக இருந்த ராபர்ட் மாஸ்டர் – வனிதா விஜயகுமார் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பே இருவரும் பிரிந்தனர்.

வனிதா – ராபர்ட் மாஸ்டர் இருவரும் காதலித்து வந்த போது வனிதா பெயரை ராபர்ட் மாஸ்டர் பச்சை குத்தியதும் பின்பு இருவருக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்த பின்பு, பச்சை குத்திய வனிதா பெயரை அளித்து விட்டார் ராபர்ட் மாஸ்டர். இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருந்த வனிதா வாழ்க்கையில் பீட்டர் என்கிற நபர் என்ட்ரி கொடுக்க, பீட்டரை காதலித்து முன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா.

வனிதா எதற்கு முன்பு செய்து கொண்ட திருமணத்தை விட, பீட்டரை திருமணம் செய்து கொண்டது தான் மிக பெரிய சர்ச்சையாக வெடித்து விவாத பொருளாக மாறியது. தனியார் தொலைக்காட்சியில் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்ற விவாதத்தில் கடும் கோபம் அடைந்த வனிதா, நீ என்ன பெரிய ஐகோர்ட் ஜட்ஜா?. சரி தான் போடி. உனக்கு குடும்பம் இல்லையா. நீ இயக்குநராக இருந்தால் படம் எடுடி என் வாழ்க்கையில் ஏன் தலையிடுகிற.

நீ ரொம்ப பத்தினி. ஒருத்தனுக்கு ஒருத்தினு டிராமா போடாத. ஒரு புருஷன் இருப்பதால் நீ பெரிய ஒழுங்கா. என்கிட்ட பதில் சொல்லுடி, தைரியமா சொல்லுடி. நீ யாருன்னு எனக்கு தெரியும் என லட்சுமி ராமகிருஷ்ணனை சகட்டு மேனிக்கு கிழித்தெடுத்தார் வனிதா விஜயகுமார். இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் வனிதா மகள் ஜோவிகா தற்பொழுது பிக் பாஸ் வீட்டின் உள்ளே என்ட்ரி கொடுத்து தினமும் ஹை லைட்டில் இருந்து வருகிறார்.

நடிகை வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும், ஜோவிகா, ஜெய்னிதா என இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரியும், மகள் ஜோவிகாவும் ஆகாஷுக்கு பிறந்தவர்கள், அதேபோல் ஜெய்னிதா இரண்டவாது கணவர் ராஜனுக்கு பிறந்தவர். ஆனால் இதற்கு முன்பு இரண்டாவது கணவர் ராஜன் அளித்த பேட்டி ஒன்றில் ஜோவிகா, ஆகாஷின் மகள் இல்லை என்று பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

அதாவது வனிதா ஆகாஷை விவாகரத்து செய்த பின்னர், அருண் என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு பிறந்தவர் தான் ஜோவிகா என்றும் கூறி இருந்தார்.தற்பொழுது பிக் பாஸ் ஷோ மூலம் பிரபலம் அடைந்துள்ள ஜோவிகா தந்தை யார் என்கிற விவாதம் அனல் பறந்து வரும் நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக உரையாடிய வனிதாவிடமே ரசிகர்கள் இந்த கேள்வியை முன்வைத்தனர். இதற்கு வனிதா, ஜோவிகா ஆகாஷின் மகள் தான், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஜோவிகா அவரது தந்தை பெயரை தன் பெயருக்கு பின்னால் வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவரது பெயரை தான் இனிஷியலாக வைத்திருக்கிறார் என விளக்கம் அளித்தார்.

அதேபோல் தாங்கள் தன் கணவர் ஆகாஷோடு இன்னும் தொடர்பில் தான் இருக்கிறீர்களா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த வனிதா, ஆரம்பத்தில் எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருந்தது உண்மை தான். ஆனால் தற்போது குழந்தைகளுக்காக நான் என் முன்னாள் கணவர்கள் ஆகாஷ் மற்றும் ராஜன் இருவருடனும் தொடர்பில் தான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் வனிதா, மேலும் நடிகை வணிதாவிடம் நீங்கள் ஏதேனும் கேள்வி கேட்க விருப்பினால் உங்கள் கேள்விகளை கமெண்ட் செய்யுங்கள்.