தவறான செய்கை காட்டிய அன்ஷிதா… அசராமல் எதிர்கொண்ட முத்துக்குமரன்.. அட.. ச்சீ.. என்ன கருமம் பிக் பாஸ் இது.?

0
Follow on Google News

பிக் பாஸ் கார்டன் ஏரியாவில் அன்சிதா தீபக் ஆனந்தி ஆகியோர் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அந்த இடத்திற்கு முத்துக்குமார் மற்றும் ஜெஃப்ரி இருவரும் வருகிறார்கள், ஜெஃப்ரி உள்ளே வரலாமா என்று கேட்டதற்கு தீபக் அதெல்லாம் தெரியாது நீங்க பெண்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டார். ஆனால் முத்துக்குமார் அதெல்லாம் இல்லை நாங்கள் உள்ளே வருவோம் என அங்கே அமர்ந்து கொண்டார்.

இப்படி அனைவரும் அமர்ந்து கார்டன் ஏரியாவில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்பாராத விதத்தில் அன்சதா ஒரு புது பிரச்சனையை முத்துகுமரனிடம் கிளப்பினார். நீ பெண்கள் அணியில் இருக்கும் பொழுது அது இது என்று பெருசா சீன் எல்லாம் போட்ட ஆனால் இப்பொழுது ஆண்கள் அணிக்கு வந்த பின்பு உனக்கு தலைக்கனம் வந்துவிட்டது. உன்னுடைய பேச்சு முற்றிலும் மாறிவிட்டது என முத்துக்குமாரை முகத்துக்கு நேராக அன்சிதா கோபத்துடனையே குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அதற்கு முத்துக்குமார் ஆமாம் நீங்கள் நினைப்பதை விட நான் 100 மடங்கு மோசமானவன். ஏனென்றால் நான் விளையாட வந்து உள்ளேன். இங்கே பயங்கரமாக விளையாடுவேன் பாருங்க என்று முத்துக்குமார் பேச, மீண்டும் அன்சிதா கோபத்தின் உச்சிக்கே சென்றாவர், ஒரு அகம்பாவம் உன் மண்டையில் விழுந்தது போன்று திமிர் உன்கிட்ட இருக்கு என்று முத்துக்குமாரை கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகிறார் அன்சிதா.

ஆனால் திடீரென்று முத்துக்குமாரை இப்படி எந்த ஒரு காரணமே இல்லாமல் அன்ஷிதா கிளி கிளி என்று கிழித்து தொங்க விடுவதற்கு காரணம் அவர் ஒரு கண்டன்ட்டை உருவாக்கி தன் பக்கம் அனைவருடைய பார்வையின் திருப்ப வேண்டும் என்பதற்காக செய்தது போன்று அமைந்தது. இதற்கு முத்துக்குமார் நேரடியாக அன்சிதாவிடம் நீங்கள் கேமராவின் அட்டென்ஷனுக்காக தான் இதுபோன்று ஓவரா ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறீர்கள்.

நீங்கள் ஒரு கண்டன்ட்டை கிரியேட் செய்ய வேண்டும் என்பதற்காக தான் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்றெல்லாம் முத்துக்குமாரும் அன்சிதாவிடம் தெரிவிக்க, ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்று கடும் கோபத்தில் இருந்த அன்சிதாவுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து கண்டபடிக்கு முத்துக்குமாரை நோக்கி தவறான செய்கையை கைவிரலை வைத்து காண்பித்தார் அன்ஷிதா.

மேலும் ரொம்ப நடிக்காதடா உன்னை பார்த்தாலே அசிங்கமா இருக்கு. உன்னிடம் பேச பிடிக்கவே இல்லை, போடா டேய் என்று கண்டபடி கோபத்தில் வார்த்தையை அநாகரிகமாக அள்ளித் தெளித்து விட்டார் அன்சிதா. இப்படி அன்ஷிதா கோபத்தில் அநாகரிகமாக மோசமாக பேசிவிட்டு முத்துக்குமரனை பார்த்து நீ தான் மோசமா நடந்து கொள்கிற என்று தெரிவித்தது, ஒரு கட்டத்தில் முத்துக்குமார் என்ன பேச வந்தாலும்,

குறுக்கிட்டு உன்கிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லை, உன்கிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லை என்று திரும்பத் திரும்ப அன்ஷிதா தெரிவிக்க, அங்கிருந்து தீபக் ஆனந்தி இருவரும் என்னடா இது வம்பா போச்சு என்று எழுந்து சென்று விடுகிறார்கள். தொடர்ந்து முத்துக்குமாரிடம் ஓவரா சண்டை போட்டுவிட்டு இனிமேல் என்கிட்ட பேச வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார் அன்ஷிதா.

இந்த நிலையில் திடீரென்று அன்ஷிதா முத்துக்குமரனிடம் இப்படி கோபப்பட்டு சண்டை போட காரணம் கடந்த வாரம் அன்ஷிதா என்கிற ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதே பலருக்கு தெரியவில்லை என்பதை உணர்ந்து தான் பிரபலமாக வேண்டும் மக்களின் அட்டென்சன் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற முத்துக்குமரனிடம் சண்டையிட்டு தன் பக்கம் அட்டென்சனை திருப்ப முயற்சிக்கிறார்.

ஆனால் ஆஷிதாவின் இது போன்ற செயலால் அவருக்கு நெகட்டிவான ஒரு பார்வை தான் விழும், அந்த வகையில் ஏற்கனவே அன்ஷிதாவின் பெயர் மிகப்பெரிய அளவில் டேமேஜ் தான் ஆகும் என்பதால் அன்ஷிதா பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here