ஸ்கூல் படிக்கிற பிள்ளைய ஏமாத்தி கிஸ் அடிச்ச ஆள் தான…. கமலஹாசனை நார் நாராக கிழித்த பிக் பாஸ் போட்டியாளர் மனைவி…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கிட்டதட்ட ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், கடந்த வாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. வார கடைசியில் கமல் முன்பு பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி போட்டியாளர் பிரதீப் ஆண்டனி மீது குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு காெடுக்கலாமா வேண்டாமா என்ற முடிவை போட்டியாளர்களிடமே தனித்தனியாக அழைத்து கேட்கப்பட்டது.

அதில் பெரும்பாலானோர் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூறியதால் அவருக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். சீசன் 7 தொடங்கிய முதல் நாளிலிலிருந்தே தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் ஸ்ட்ராட்டஜி என்ற பெயரில் திட்டமிட்டு நகர்த்தி வந்தார் பிரதீப். போட்டியில் திட்டமிடல் இருக்க வேண்டியதுதான். ஆனால் சக போட்டியாளர்களிடம் பேசுவது, பழகுவதை எல்லாமே கூட கேம் என்ற நினைப்பில் பிரதீப் செயல்பட்டதே அவரது ஆட்டத்துக்கு வினையாக முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

வார இறுதியில் தனக்கு கிடைக்கும் பலத்த கைதட்டல்களால் தான் என்ன செய்தாலும் அதை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் அவருக்குள் ஆழமான வேரூன்றியிருக்க இறுதியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். தற்பொழுது பிரதீப் ரெட் கார்ட் விவகாரம் மிக பெரிய அளவில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக கடுமையான விமர்சனம் எழுந்தது.

மேலும், வேண்டும் என்றே கார்னர் செய்து பிரதீப்பை அனுப்பியதாக அர்ச்சனா, விசித்ரா மற்றும் தினேஷ் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட நடிகர் யுகேந்திரனின் மனைவி, கமல்ஹாசனின் இந்த செயல்குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

புன்னகை மன்னன் படத்தில் 16 வயதான நடிகை ரேகாவிற்கு அவரது ஒப்புதல் இல்லாமல் கமல்ஹாசன் லிப் கிஸ் கொடுத்ததாக கூறப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார். இது உண்மையா என்பதை தெளிவுப்படுத்துமாறும் ரசிகர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். இந்த மாதிரியான சூழ்நிலையில் கமல் பிக்பாஸ் விட்டு விலகுவது தான் நல்லது. மாயா கெட்ட வார்த்தை பேசி இருக்கீங்க. உள்ளாடையை எடுத்து காமிச்சு இருக்காங்க.

பூர்ணிமா டபுள் மீனிங்ல பேசி இருக்காங்க. அவுங்களுக்கு ஒரு வார்னிங் கார்டு கூட கொடுக்கலை. மேலும் தன்னுடைய முக்கால்வாசி படங்களில் நாயகிகளுடன் லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ள கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசுவது எந்தவகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போல பல்வேறு தரப்பினரும் கமல் பிரதீப்பை எலிமினேட் செய்தது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி கமல்ஹாசன் உடன் புன்னகை மன்னன் படத்தில் நடித்த நடிகை ரேகா இதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. புன்னகை மன்னன் படத்தில் நடித்தபோது தான் மிகவும் சிறிய பெண். 10வது படித்துவிட்டு நடிக்க வந்தேன். இந்த விஷயத்தில் தன்னுடைய தந்தை ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தான் இயக்குநரிடம் கூறியபோது,

பெரிய கிங், குழந்தைக்கு முத்தம் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளும்படி இயக்குநர் தன்னை சமாதானப்படுத்தினார். அம்மாவிடம் தன்னை ஏமாற்றி முத்தம் கொடுத்ததாக தான் வருத்தப்பட்டேன். இதுகுறித்து தான் அதிகமான பேட்டிகளில் கூறியுள்ளேன். இதனால் கமலுக்கும் தன்மீது வருத்தம் இருக்கலாம். ஆனால் உண்மையை கூறவேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

படத்தில் இந்தக் காட்சி அசிங்கமாக தெரியாது என்றும் அவர் சமாதானப்படுத்தியதகாவும் நடிகை ரேகா கொடுத்துள்ள இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் தற்பொழுது அதிகமாக பகிரப்பட்டு பள்ளி படிக்கும் சின்ன பொண்ணுக்கு ஏமாற்றி கிஸ் அடித்த கமல்ஹாசன் என்று பெண் பாதுகாப்பு பற்றி பேசுவதா என மிக கடுமையாக விமர்சனம் முன் வைத்து வருவது குறிப்பிடதக்கது.