ஜிபி முத்து பார்முலா… அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு தெறித்து ஓடும் போட்டியாளர்கள்..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனாலேயே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன், மற்றும் போட்டியாளர்களாக ஏராளமான பிரபலங்கள் என மிகப்பெரிய பட்ஜெட்டில் விஜய் தொலைகாட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

எப்போதும் சண்டை, பஞ்சாயத்து மற்றும் கிசுகிசு என கன்டென்ட்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறு சீசனை நிறைவு செய்து விட்டது. இப்போது ஏழாவது சீசனில் இரண்டு கமல், இரண்டு பிக்பாஸ் வீடு இருப்பதால், பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர். பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி மாலை 6 மணியளவில் பிரம்மாண்டமாக தொடங்கியது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கடந்த வார முடிவில் அனன்யா வெளியேறினார். இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்பதால், கண்டிப்பாக பிரச்சினைகளும் இரட்டிப்பாக இருக்கும் என்று மக்கள் பலரும் யூகித்தனர். அவ்வாறே, நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து போட்டியாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. எல்லா சீசனிலும் இளம் வயதினர் மற்றும் பெரியவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

அதேபோலத்தான் இந்த சீசனிலும், இளம் வயதினர் மற்றும் பெரியவர்கள் போட்டியாலர்களாகப் பங்கேற்றுல்லானர். பொதுவாக வயதானோர் அட்வைஸ் பண்ணாலே இளைஞர்களுக்குப் பிடிக்காது, அதேபோல், இளைஞர்களின் நடத்தைகள் பெரியவர்களுக்குப் பிடிக்காது.. இப்படி இரு வேறு தரப்பினரை ஒரே வீட்டில் நூறு நாட்கள் அடைத்து வைத்தால், பிரச்சினை என்பது பூதாகரமாகத்தானே வெடிக்கும்.

அப்படித்தான், ஜோவிகா, விசித்ரா இடையே ஏற்பட்ட பிரச்சினையும் கூட… இப்படி, பிக்பாஸ் வீட்டில் நடப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் பலரும் நிகழ்ச்சியில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுவார்கள். இது எல்லா சீசன்களிலும் நடந்ததுண்டு. இப்போது இந்த சீசனில் பவா செல்லதுரை நிகழ்ச்சியில் என்னால் இருக்க முடியவில்லை, வெளியேற வேண்டும் என்று கேட்டுள்ளார்,

பிக்பாஸும் அதற்கு ஓகே சொல்லி அவரை வெளியேற்றியுள்ளார். பவா செல்லத்துரைக்கு வயது 61. பிக்பாஸ் வீட்டிலேயே இவர்தான் பெரியவர். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களின் மனநிலையோடு பாவாவின் மனநிலை ஒத்துபோகாதது கூட அவர் வெளியஎரியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

இதற்கு முந்தைய சீசனில் பலரும் இதே போல் வெளியேறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சீசனில் ஸ்ரீ, பரணி, ஓவியா ஆகியோர் பாதியிலேயே வெளியேறினர். அதேபோல், சரவணன், மதுமிதா, கவின் ஆகியோர் மூன்றாவது சீசனிலும், கேப்ரியல்லா நான்காவது சீசனிலும், நமீதா மாரிமுத்து, சிபி போன்றோர் ஐந்தாவது சீசனிலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். கடந்த ஆறாவது சீசனில் ஜிபி முத்து, கதிர் மற்றம் அமுதவாணன் ஆகிய போட்டியாளர்கள் சில லட்சங்களோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கிளம்பினர். இவர்களின் வரிசையில் இப்போது பவா செல்லத்துரையும் இணைந்துள்ளார்.