பாக்கியலட்சுமி சீரியல் கோபி வாழ்க்கையில் உள்ளே வந்த மூன்றாவது பெண்… இது சீரியல் இல்லை ரியல் லைப் பஞ்சாயத்து…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியலுக்கு, குடும்ப தலைவிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தொடரை சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாட மிக முக்கியமான காரணமே இந்த கோபி கதாபாத்திரம் தான். அவர் செய்யும் அட்ராசிட்டியை பார்ப்பதற்காகவே, ரசிகர்கள் இந்த தொடரை தவறாமல் கண்டுகளிக்கின்றனர். சதீஷ் என்ற அவரின் ஒரிஜினல் பெயரே மறந்து போய் கோபி என்ற பெயர் தான் அனைவர் மனதிலும் இருக்கும்.

அப்படி அவர் அந்த சீரியலில் இரு மனைவிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறார். பொதுவாக வில்லன் என்றால் எல்லோரும் அவரை தான் திட்டி இருப்பார்கள். ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் வரும் கோபி கேரக்டர் மட்டும், வில்லத்தனம் செய்தாலும் பலருடைய பாராட்டுக்கள் மற்றும் அனுதாபத்தையும் பிடித்து விடுகிறார்.

பாக்கியாவிற்க்கு துரோகம் செய்துவிட்டு, கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் பாக்கியா மீது அவருக்கு இன்னும் பொறாமை தீரவில்லை. தனக்கு பிடிக்காத பெண்ணை அம்மாவும், அப்பாவும் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று அந்த திருமணமே வேண்டாம் என சொல்லி, மூன்று குழந்தைகள் பிறந்த பிறகும் கோபி அவரை டைவர்ஸ் செய்து விட்டு, பிடித்த பெண்ணான ராதிகாவை திருமணம் செய்து இருந்தாலும், இந்த வாழ்க்கையிலும் கோபி நிம்மதியாக இல்லை.

இந்நிலையில் தான் கோபிக்கு இரண்டு பெண்களால் சீரியலில் பிரச்சனை இருப்பது போதாது என்று, தற்போது நிஜ வாழ்க்கையிலும் மூன்றாவது ஒரு பெண்ணால் மிகப்பெரிய பிரச்சனை வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, கலாசேத்ரா காலனியில் உள்ள, அருள்மிகு ஆறுபடை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கோபி சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து அவரிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்.

ஆனால், அப்போது கோபி செல்ஃபி எடுக்க மறுத்ததால், சில நாட்களுக்கு பிறகு கோபியின் செல்போன் நம்பரை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து, கோபியை செல்போனில் தொடர்பு கொண்டு, செல்ஃபி எடுக்க வேண்டும் என தொந்தரவு செய்திருக்கிறார். அதனால் கடுப்பாகி அந்த பெண்ணுடைய நம்பரை கோபி பிளாக் செய்திருக்கிறார்.

அதை தொடர்ந்து மீண்டும் அந்த பெண், அடையாரில் உள்ள கோபி வீட்டுக்கு வந்து, குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை வீட்டில் வைத்து விட்டு, செய்வினை செய்து விடுவேன் என வினோதமான முறையில் மிரட்டியிருக்கிறார். இதனால் பதறிப்போன கோபி அந்த பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை பார்த்த டிவி சீரியல் ரசிகர்கள், கோபி, பாக்கியலட்சுமிக்கு செய்த பாவம்தான் இன்று இவருக்கு இப்படி சூனியம் வைக்க காரணமானது எனக் கூறி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இந்த கோபிக்கு இது வேண்டும் தான் என்றும் கூறிவருகின்றனர். பாக்கியலட்சுமி ரசிகர்கள் இது வெறும் பொழுதுபோக்குக்கான சீரியல் என்று நினைக்காமல், கோபி மீது வன்மத்தோடு பதிவிடுவதை பார்த்து, கோபியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காசுக்காக அவர்கள் சொல்வதை தான் நான் நடிக்கிறேன்.

அது என்னுடைய ரியல் லைஃப் கேரக்டர் இல்லை, இதற்காக என்னை வார்த்தையால் காயப்படுத்தி பேசுவது சரியா? என்றெல்லாம் மிகவும் பாவமாக வீடியோ போடுவார். ஆனாலும் சீரியலில் ஊறிப்போன சிலர் இன்று வரையில், ரியல் லைஃபிலும் கோபியை திட்டிவருகின்றனர். அப்படிதான் தற்போதும் இந்த கோபிக்கு இது தேவைதான் என்றும், விட்டால் அவர்களே வந்து சூனியம் வைத்துவிடுவார்கள் போல, அந்த அளவிற்கு பல குடும்பப் பெண்களும் கோபிக்கு எதிராக இருக்கின்றனர்.