கலக்கப்போவது பாலாவின் கடவும் மனசு… கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு விழுந்த சவுக்கடி…

0
Follow on Google News

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் பாலா. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக விளங்கி வருகிறார். மேலும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிசி ஆனா ஒரு ஆர்டிஸ்ட் ஆக வரும் பாலா, ஒரு காமெடியனாக பலருக்கும் தெரிந்த நிலையில் அவரின் மனிதநேயமிக்க ஒரு செயல் பலரை வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஆதரவற்ற 25 குழந்தைகளை தன்னுடைய சொந்த செலவில் வளர்த்து அவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார் பாலா. இந்த நிலையில் மிக குறைந்த சம்பளமே வாங்கும் பாலா சுமார் 25 குழந்தைகளுக்கு குழந்தைகளை வளர்த்து வரும் நிகழ்வு நடிகர் ராகவா லாரன்ஸ் கவனத்திற்கு சென்றுள்ளது. ராகவா லாரன்ஸும் மாற்றுத்திறனாளிகளுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் ஆதரவற்ற பல குழந்தைகளுக்கும் உதவி செய்து வரக்கூடியவர் ராகவா லாரன்ஸ. பாலாவின் நல்ல முன்னெடுப்பை அறிந்த லாரன்ஸ் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் பாலா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது, பாலா செய்து வரும் உதவிக்கு உறுதுணையாக 10 லட்சம் ரூபாய் நண்கொடை அதே மேடையில் அளித்துள்ளார் லாரன்ஸ்.

இந்த நிலையில் மிக குறைந்த சம்பளம் வாங்கும் கலக்கப்போவது பாலாவின் அந்த கடவுள் மனசை பார்த்த மக்கள் இது போன்று கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் பல நடிகர்களுக்கு சவுக்கடியாக விழுந்துள்ளது பாலாவின் இந்த கடவும் மனசு.