ரூட்டை மாற்றிய அனிரூத்.. சினிமா சரிப்பட்டு வராது… கோடிகளை குவிக்க பக்கா மாஸ்டர் பிளான் போட்ட அனிருத்..

0
Follow on Google News

3 படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுமான இசையமைப்பாளர் அனிருத், முதல் படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலக அளவில் பிரபலமானார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் என முன்னனி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து, இன்றைய தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இசை அமைப்பாளர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் அனிருத் பிசி இசை அமைப்பாளராக அவர் கைவசம் இருக்கும் படங்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் இசை அமைப்பதில் தாமதம் செய்கிறார்கள் என்ற ஒரு விமர்சனமும் அனிருத் மீது உண்டு. இந்த நிலையில் சினிமாவில் சம்பாதிப்பதை விட கச்சேரிகளில் அதிக அளவு சம்பாதிக்க தொடங்கியுள்ளார் அனிருத்.

கடந்த மாதம் மலேசியாவில் நடந்த அனிருத் இசை கச்சேரி மிகப்பெரிய வெற்றியை பெற்றது நிலையில் தொடர்ந்து சினிமாவில் படங்கள் இசை அமைப்பது சம்பாதிப்பதை விட அதிக அளவு கச்சேரி நிகழ்ச்சி மூலம் வருமானம் வருவதை புரிந்து கொண்ட அனிருத், அடுத்தடுத்து பல கச்சேரிகளில் நடத்த இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் நடக்க இருக்கும் அனிருத் இசை கச்சேரியின் ஆன்லைன் டிக்கெட் ஓபனிங் தொடங்கிய 30 நிமிடத்தில் சுமார் 8000 டிக்கெட் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னையை தொடர்ந்து கோவை அதன் பின்பு லண்டன் என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு கச்சேரியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் அனிருத். இந்நிலையில் ஏற்கனவே சினிமாவில் பிஸியாக இருக்கும் அனிருத் ஒவ்வொரு மாதமும் ஒரு கச்சேரி நடத்துவதால் அவர் இசையமைக்கும் படங்களுக்கு இசை அமைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்பது குறிப்பிடதக்கது.

கார்த்திக் – இயக்குனர் இடையில் மோதல்… பொன்னியின் செல்வன் வசூலுக்கு உதயநிதி வெச்ச ஆப்பு..