DDக்கே ஆப்பு வைத்த பீகார் பிரியங்கா… இதெல்லாம் ஒரு பொழப்பா…தன்மானம் காத்த தமிழச்சி மணிமேகலை..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை தனக்கு தன்மானமா.? இல்லை வருமானமா.? என்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டபோது, எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று வருமானத்தை தூக்கி எறிந்து வெளியேறி தன்னுடைய தன்மானத்தை நிரூபித்துள்ளார் தமிழச்சி மணிமேகலை. இந்த நிலையில் மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முழுக்க முழுக்க முக்கிய காரணம் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே தான் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கு இடையிலான மோதலில், தற்பொழுது தமிழச்சி மணிமேகலையை தன்னுடைய அடக்கு முறையால் ஒரு நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றிய பிரியங்கா தேஷ் பாண்டே கர்நாடகாவா.? இல்லை பீகாரா.? என்கின்ற விவாதம் தற்பொழுது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அவருடைய பெயர் பின்னால் தேஷ் பாண்டே என்று வருவதால் நிச்சயம் அவர் பூர்வீகம் பீகாரை சேர்ந்தவராகத் தான் இருக்க முடியும் என்று பல தமிழ் அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சி இருக்கும் முக்கிய நபர்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலான கடுமையான உழைப்பின் காரணமாக தற்பொழுது தமிழ் தொலைக்காட்சிகளில் அசைக்க முடியாமல் இருந்து வரும் டாப் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது. ஆனால் இப்படி நான்கு நபர்களின் கடுமையான உழைப்பால் மிகப்பெரிய உச்சத்தை எட்டி உள்ள விஜய் தொலைக்காட்சி ஒரு பெண்ணால் மிகப்பெரிய சரிவை சந்தித்து விடுமா என்கின்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

அதாவது ஒரு சில நிறுவனங்களில் யாரை கைக்குள்ள போட்டால் நாம் காரியம் சாதிக்கலாம் என்று தங்களுக்கு திறமை இருந்தாலும், தங்களுடைய வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொள்ளவும், மேலும் தங்களுடைய இடத்திற்கு வேறு யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், குறிப்பாக தங்களுக்கு போட்டியாளராக வருகின்றவர்களை கட்டம் கட்டுவதற்காக, சிலர் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள உயர் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு பல காரியங்களை சாதிப்பார்கள்.

அப்படித்தான் பிரியங்கா தேஷ் பாண்டேவும் விஜய் தொலைக்காட்சியில் உயர் அதிகாரிகளாக இருக்கும் ஒரு சிலரை தன்னுடைய கைக்குள் போட்டுவிட்டு பலரை விஜய் தொலைக்காட்சியில் இருந்து கட்டம் கட்டி வெளியேற்றி இருக்கிறார். அப்படி வெளியேற்றப்பட்டு வெளியேறுவதற்கு காரணம் பிரியங்கா தேஷ் பாண்டேவின் அடக்கு முறை தான் என்றும், அப்படி வெளியேற்ற பட்டவர் பட்டியலில் மணிமேகலை இணைந்துள்ளார்.

இதற்கு முன்பு விஜய் டிவியில் பிரியங்காவால் வெளியானவர்கள் யாரும் தங்கள் பாதிக்கப்பட்டது குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் முதல் முதலில் ஒரு தமிழச்சி மணிமேகலை, தான் பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக தெரிவித்த பின்பு, தற்பொழுது பலரும் பிரியங்கா டேஸ் பாண்டேவால் பாதிக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியையும் தொகுப்பாளினி டிடியையும் பிரிக்கவே முடியாது என்று சொல்வார்கள், அப்படி இருக்கையில் விஜய் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக இருந்த டிடி உடல்நிலை சரியில்லாமல் சில காலம் ஓய்வில் இருந்த போது, டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை பிரியங்கா கைப்பற்றி அதன் பின்பு டிடி உள்ளே வராதபடி உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்து தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here